tamilnadu

img

நடிகை சரிதா நாயர் உள்பட 3 பேருக்கு 3 ஆண்டு சிறை

காற்றாலை மோசடி வழக்கு

கோவை, அக்.31 -  காற்றாலை அமைத்துத் தருவ தாகக்கூறி மோசடியில் ஈடுபட்ட வழக்கில் கேரள நடிகை சரிதாநாயர், அவரது கணவர் பிஜூ ராதா கிருஷ்ணன், மேலாளர் ரவி ஆகிய 3 பேருக்கும்  மூன்றாண்டு சிறைத் தண்ட னை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கேரளாவில் சோலார் பேனல் மோசடி புகாரில் சிக்கியவர் திரைப்பட நடிகை சரிதா நாயர். இந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அவர், பல மாதங்களுக்கு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த அவர், காங்கிரஸ் அரசில் அமைச்சர்களாக இருந்த  பலரும் பண மோசடி செய்ததாக குற்றம் சாட்டினார். மேலும், அப்போதைய முதல்வர் உம்மன்சாண்டி, காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹிபி ஈடன் ஆகியோர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக வும் கூறினார். இந்த விவகாரம் கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கு அம்மாநில நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. 

இந்நிலையில் இவர் 2009 ஆம் ஆண்டு கோவை வடவள்ளியில் ‘ஐசிஎம்எஸ்’ என்ற பெயரில் காற்றாலை  உபகரணங்கள் விற்பனை செய்து வந்தார். அப்போது, காற்றாலை அமைத்து தருவதாக கூறி கோவை யை சேர்ந்த தியாகராஜன் மில்ஸ் சேர்மன் தியாகராஜனிடம் ரூ.28 லட்சம், உதகையைச் சேர்ந்த ஸ்ரீ அபு பாபாஜி சேரிடபிள் டிரஸ்ட் நிர்வாகி கள் வெங்கட் ரமணன் மற்றும் ஜோயோ விடம் ரூ.5.50 லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டு மோசடி செய்தாக கோவை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் சரிதா நாயர், அவரது கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன், மேலாளர் ரவி ஆகி யோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை குற்றவியல் 6 ஆவது நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

இந்த நிலையில், வியாழனன்று  சோலார் பேனல் நிறுவன மோசடி வழக் கில் சரிதா நாயர், அவரது கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன், மேலாளர் ரவி ஆகிய 3 பேரும் குற்றவாளி என்று நீதிபதி கண்ணன்  தீர்ப்பளித்தார். மேலும், சரிதா நாயர், பிஜூ ராதாகிருஷ்ணன், ரவி ஆகியோருக்கு  3 ஆண்டு சிறைத் தண்டனையும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்த நீதிபதி, அபராதத் தொகையை கட்டத் தவறினால் 9 மாதம் கூடுதல் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தீர்ப்பளித்தார்.