ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்களுக்கான துறை வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், அடுத்த 30 ஆண்டுகளில் உலக மக்கள் தொகை யில் 200 கோடி அதிகரித்து விடும் என்று கூறப்பட்டுள்ளது. 2050ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகையானது 970 கோடியாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதே வேளையில் 2019 தொடங்கி 2050ஆம் ஆண்டுக்குள்ளாக இந்தியாவின் மக்கள் தொகையில் 27 கோடி அதிகரிக்கும் என்றும், 2027ஆம் ஆண்டில் அதிக மக்கள் தொகையில் சீனாவை முந்தி விடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 21ஆம் நூற்றாண்டு முடியும் வரை அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலேயே நீடிக்கும் என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை 137 கோடியாக இருந்ததாகவும், சீனாவின் மக்கள் தொகை 143 கோடியாக இருந்ததாகவும், 2027ஆம் ஆண்டில் சீனாவின் மக்கள் தொகையை இந்தியா முந்திவிடும் என்று ஐநா அறிக்கை தெரி விக்கிறது. 2019ஆம் ஆண்டில் உலகின் மக்கள் தொகை 770 கோடியாக இருந்ததாகவும், 2050 ஆம் ஆண்டுக்குள் 200 கோடி அதிகரிக்கும் எனவும் இந்த அறிக்கை கூறுகிறது. 2019ஆம் ஆண்டுக்கும் 2050ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 55 நாடு களின் மக்கள் தொகை குறைந்தது 1 விழுக் காடாவது சுருங்கும் என்று கூறப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டுக்குப் பின் 27 நாடுகளின் மக்கள் தொகை குறைந்தபட்சமாக ஒரு விழுக்காடு சுருங்கியுள்ளது. இந்நூற்றாண்டி ன் இறுதியில் உலகின் ஒட்டுமொத்த மக்கள் தொகை 1100 கோடியாக உயரும் என்று இந்த அறிக்கை மதிப்பிட்டுள்ளது.