ஈரோடு, டிச. 2- ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து, மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சார்பில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. இப்பேரணியை டி.ஆர்.ஓ. கவிதா கொடிய சைத்து துவக்கி வைத்தார். பரிசோதிக்காத ரத்தம் எய்ட்ஸ் நோய்க்கு வழி வகுக்கும். இது தொற்று நோயல்ல. அறிகுறிகள் தென்பட்டதும் சிகிச்சை பெறத் துவங்கினால், நோயின் வீரியத்தை கட்டுப் படுத்தலாம். அனைத்து அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இதற்கான ஆலோசனை பெறலாம், என்ற பேனர்களுடன் பேரணியாக சென்றனர். இதில் பல்வேறு நர்சிங் கல்லூரியை சேர்ந்த மாணவியர் கலந்து கொண்டு பேரணியாக சென்றனர். இதனை அடுத்து ஈரோடு அரசு மருத்துவமனையில், பேரணி நிறைவடைந் ததும் பொதுமக்களுக்கு, எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங்கினர்.