tamilnadu

img

தோழர் ரமணிக்கு அஞ்சலி

ஈரோடு, ஜூலை 18- ஈரோடு மாவட்டத்தில் சாலை விபத் தில் உயிரிழந்த தோழர் ரமணியின் வீட்டில் விதொச தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். ஈரோடு மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும், இந்திய தொழிற் சங்க மையம், விவசாய தொழிலாளர் சங்கம் மற்றும் வாலிபர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளில் பல்வேறு பொறுப்பு வகித்து அப்பகுதி மக்களுக்காக கோரிக்கைகளை முன் வைத்து ஏராளமான போராட்டங்களை நடத்தி வந்தவர் தோழர் ரமணி. இவர் கடந்த 10ஆம் தேதி பெரியமோளபாளையம் பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் அகால மரணமடைந்தார்.  இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் மாநில செயற்குழு உறுப்பின ரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரு மான ஏ.லாசர், விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் அமிர்தலிங்கம், மாநில செயலாளர் பழனி சாமி, மாநில பொருளாளர் சங்கர், மாவட்ட  தலைவர் ஆர்.விஜயராகவன் ஆகியோர்  வியாழனன்று ரமணியின் வீட்டில் அவ ரது படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத் தினர். மேலும், அவரது குடும்பத்தாருக்கு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித் தனர்.