tamilnadu

டிஎன்பிஎஸ்சி., தேர்வுக்கான பாடத்திட்டம் மாற்றம் ஆட்சியரிடம் மாணவர்கள் முறையீடு

 ஈரோடு, அக். 14- டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான பாடத்திட்ட மாற்றத்தை அமல்படுத்தக்கூடாது எனக்கூறி, போட்டி தேர்வுக்கு படித்து வரும் மாணவர்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவனிடம் மனு அளித்தார். இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் திங்களன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகா மில் போட்டி தேர்வுக்கு படித்து வரும் மாணவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த மூன்றாண்டுக்கு மேலாக நாங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர் வாணையம் (டிஎன்பிஎஸ்சி) உள்ளிட்ட போட்டி தேர்வுக ளுக்கு ஏற்கனவே உள்ள வினாத்தாளுக்கான பாடத்திட் டப்படி படித்து வருகிறோம். இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கான தொகுதி 2, 2 அ ஆகியவற்றிற்கான பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக, மொழி பெயர்ப்பு பகுதி, அப்பகுதியில் குறிப்பிட்ட மதிப்பெண் பெற்றால் மட்டுமே பிற விடைத்தாள்கள் திருத்தப்படும் என்பது பெரும் சிக்கலானது. அதில் பல கலைச்சொல், கடினமாக மொழி கையாளப்பட்டுள்ளது. தமிழ் இலக்கியம், ஆங்கில மொழி மாற்றம், முச்சங்கம், மூவேந்தர் போன்றவைகளை மொழி பெயர்ப்பது, கலை  சொல் பயன்படுத்துவது சிரமமாகும். மேலும், சிபிஎஸ்சி பள்ளிகளில் படித்துவிட்டு போட்டி தேர்வெழுத்துவோருக்கு மட்டுமே இது சாத்தியமாகும். கடந்த நான்கைந்து போட்டி தேர்வுகளில், வினாத்தாள் எடுத்தபோதே, பல தவறுகள் இருந்ததை நீதிமன்றமே சுட்டிக்காட்டி உள்ளது. அந்த அளவுக்கு, டிஎன்பிஎஸ்சி-யிலேயே தவறு நடக்கும் நிலையில், புதிய பாடத்திட்டதை நாங்கள் கற்று, அதை புரிந்து விடை எழுதி தேர்ச்சி பெறுவது சிரமமாகும்.  மேலும், அப்பாடத்திட்டம் முழுமையாக மாற்றப் பட்டதால், மீண்டும் நாங்கள் முதலில் இருந்து படிக்க வேண்டி உள்ளது. ஆகவே, இந்த பாடத்திட்டத்தை அமல் படுத்தக் கூடாது என மனுவில் கூறப்பட்டுள்ளது.இம் மனுவினை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், இக்கோரிக்கை குறித்து அரசுக்கு பரிந்துரை செய்வதாக தெரிவித்தார்.