tamilnadu

அந்தியூர் அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல்

ஈரோடு, டிச. 8- அந்தியூர் அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல் செய் யப்பட்டது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள தவுட்டு பாளையம் பகுதியில் சிலர் மணல் கடத்தி விற்பனை செய்வதாக அந்தியூர் வட்டாட்சியருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து நேற்று காலை வட்டாட்சியர் மாலதி தலைமையில் கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம், உதவியாளர் சந்திரன் ஆகியோர் தவிட்டுபாளையம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப் போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை யிட்டதில், தாராபுரம் பகுதியில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து லாரியை பறிமுதல் செய்து, அந்தியூரில் உள்ள வட் டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.மேலும் லாரி ஓட்டுநர் ஈஸ்வரனிடம் வருவாய்த்துறை அதி காரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்