tamilnadu

பொது வினியோகத் திட்ட குறைகேட்பு கூட்டம்

ஈரோடு, ஜூன் 7- ஈரோடு மாவட்டத்தில் பொது விநியோத்திட்ட குறை கேட்பு முகாம் சனிக்கிழமை நடைபெற உள்ளது. ஈரோடு வட்ட குறை கேட்புக் கூட்டம் பேரோடு சமு தாயக் கூடத்தில் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் தலைமையில் நடைபெறுகிறது. இதேபோல் மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயராமன் தலைமையில் பெரு துறை ஆர்.எஸ் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்திலும், பவானி - ஒரிச்சேரி பஞ்சாயத்து அலுவல கத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தலைமையிலும், கோபி - அரக்கன்கோட்டை இந்திரா நகர் அங்கன்வாடி மையத்தில் கோபி வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலும், சத்தி - கொமரபாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி வளாகத்திலும், அந்தி யூர் - பிரம்மதேசம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி வளாகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலுவலர் தலைமையில் கூட்டம் நடை பெற உள்ளது.  மொடக்குறிச்சி - கண்டிகாட்டுவலசு அடுத்த லிங்கத்தா குட்டை ரேஷன் கடையில் உதவி ஆணையர் (கலால்) சேகர்  தலைமையிலும், கொடுமுடி - சுமைதாங்கிபுதூர் ரேஷன்  கடையிலும், தாளவாடி - பாரதிபுரம் ரேஷன் கடையிலும், நம்பியூர் - நிச்சாம்பாளையம் தொடக்க வேளாண் கூட்டு றவு கடன் சங்கத்திலும் குறை கேட்பு கூட்டம் நடைபெறும். காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடை பெறும் குறை கேட்பு கூட்டத்தில் குடும்ப அட்டை பெறு தல், பொருட்கள் பெறுதல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு மனு வழங்கி தீர்வு பெறலாம்.

;