ஈரோடு, செப். 12- சம்பளப் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி ஈரோடு அரசு மருத்துவக்கல் லூரி மருத்துவமனை ஊழியர்கள் மேற் கொண்டு வந்த வேலை நிறுத்தம் தற்காலி கமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தை அடுத்த பெருந்து றையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனை செயல்பட்டு வருகிறது. இங்கு 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஒப்பந்த பணியாளர்களாக பணியாற்றி வருகின்ற னர். இவர்களுக்கு கடந்த 4 மாதங்களாக முறையாக ஊதியம் வழங்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த திங்களன்று சிஐடியு தலைமையில் தொடர் முழக்கப் போராட் டத்தில் ஈடுபட்டனர். அப்போது, இப்பிரச்ச னைக்கு உரிய முறையில் தீர்வு காணலாம் என மருத்துவமனை நிர்வாகம் மற்றும் ஒப் பந்ததாரர்கள் தெரிவித்தனர்.
ஆனால், இதன்பின்னரும் உரிய தீர்வு எட்டப்பட வில்லை. இதையடுத்து, செவ்வாய்கிழமை முதல் செவிலியர்கள், தொழில்நுட்ப பணியாளர் கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் பாது காவல் பணி செய்யும் தொழிலாளர்கள் வேலையைப் புறக்கணித்து போராட்டத் தில் ஈடுபட்டனர். பெருவாரியான தொழிலா ளர்கள் கலந்து கொண்ட போராட்டம் 3 நாட்களாகத் தொடர்ந்த நிலையில், செப். 17 ஆம் தேதிக்கு பிறகு மருத்துவக் கல்வி இயக்குனரகம் இணைச் செயலாளர் சரத் பாபு, தலைமை நிதி ஆலோசகர் (சுகாதா ரம்) வரதராஜன் மற்றும் கிரிஸ்டல் நிறுவ னத்தின் தமிழ்நாடு பொறுப்பாளர் ஸ்ரீராம் ஆகிய மூவரும் ஈரோட்டிற்கு வருகை தரு வார்கள். அப்போது ஊழியர்களின் கோரிக் கைகளை பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்று மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளர் உறுதியளித்தார். இதனடிப்படையில் வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிக மாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.