tamilnadu

img

இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி நிலையம் அமைச்சர் திறந்து வைப்பு

கோபி, மார்ச் 4- கோபிசெட்டிபாளையத்தில் தனியார் அறக்கட்டளை சார்பில் கிராமப்புற இளைஞர்களுக்கான 100 சதவிகித வேலைவாய்ப்புகளுடன் கூடிய இலவச திறன் மேம் பாட்டு பயிற்சி நிலையத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திறந்து வைத்து சிறப் புரையாற்றினார். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் செயல் படும் தனியார் மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெற்ற பயிற்சி நிலைய தொடக்கவிழாவிற்கு கல்லூரி தாளாளர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். இவ்விழாவில் கலந்து கொண்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி நிலையத்தை தொடங்கி வைத்து, பயிற்சி வகுப்பு களை பார்வையிட்டார். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற விழாவில் சிறப்புரையாற்றிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசுகையில்,  நமது  இந்திய நாடு வேற்றுமையில் ஒற்றுமையான நாடு. அனைத்து மாணவர்களும் எந்த ஒரு பாகுபாடுமின்றி ஒற்று மையுடன் இருக்க வேண்டும் என்றார். மேலும் இயற்கை மாற்றங்கள் ஏற்பட்டு வரும் இக்காலகட்டத்தில் இயற் கையை பாதுகாக்க அனைத்து மாணவர்களும் ஒரு மரத்தை  வளர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். மேலும், இந்த நாடு வளர்ச்சியடைய வேண்டுமென் றால் கல்வியால் ஒன்றால் மட்டுமே முடியும் என்றும்,  மாணவர்களின் வளர்சிக்காக இந்த அரசு எப்பொழு தும் துணைநிற்கும் என்றும் தெரிவித்தார். இவ்விழா வில் கல்லூரி தாளாளர், முதல்வர் உள்ளிட்ட அறக்கட் டளை உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.