ஈரோடு, செப். 21- மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற இ-சேவை மையத்தில் விண்ணப்பிக் கலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் தெரி வித்துள்ளார். இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சி யர் சி.கதிரவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை, அரசு சார்பில் மாதம் தோறும் ஆயி ரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங் கள், வட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாற்றுத்திறனாளி கள் நல அலுவலகம், சிறப்பு மனு நீதி நாள் முகாம் போன்ற பல்வேறு கூட்டங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பங்கள் பெற அரசு அலுவலகங்களுக்குச் செல்ல சிரமப்பட்டு வருகின்றனர். இதனைக் குறைக்கும் வகையில் மாற் றுத்திறனாளி உதவித்தொகை விண்ணப் பிக்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. அதன் படி ஈரோடு மாவட்டத்தில், மாற்றுத்திற னாளிகள் உதவித்தொகை கேட்டு விண் ணப்பிக்க தங்களது இருப்பிடத்துக்கு அருகில் உள்ள இ-சேவை மையத்தில் விண் ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் ஒரு புகைப்படம், ஆதார் அட்டை, மாற்றுத்திற னாளிகள் அடையாள அட்டை, மாற்றுத் திறனாளி சான்றிதழ், வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியற்றை கொண்டு வந்து ரூ.10 கட்டணம் செலுத்தி விண்ணப்பித்துப் பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரி வித்துள்ளார்.