tamilnadu

img

சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு,அக்.4- சம வேலைக்கு சம  ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வெள்ளி யன்று தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் ஈரோடு ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடை பெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத் திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சசிகலா தலைமை வகித்தார். மாவட்ட செய லாளர் தமிழ்செல்வி கோரிக்கை விளக்க உரை யாற்றினார். தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் மாநில செயலாளர் வி. உஷாராணி ஆர்ப்பாட் டத்தை தொடங்கி வைத் தார். இதில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வெங்கிடு, தமிழ்நாடு சுகாதார பார் வையாளர் சங்க மாவட்ட செயலாளர் சாரதா, கண் மருத்துவ உதவியாளர் சங்கத்தின் நிர்வாகி எஸ்.சுகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  முன்னதாக, ஆர்ப் பாட்ட முடிவில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித் தனர். மேலும், கோரிக் கையை அரசு நிறைவேற்றா விட்டால் வருகின்ற அக்.9 ஆம் தேதியன்று சென்னை  சேப்பாக்கத்தில் உண்ணா விரத போராட்டத்தில் ஈடு படுவது என்று தெரிவித் தனர்.

;