கோபி, நவ.11- கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சிறுவலூரில் வாரிசு சான்று வழங்க விவசாயிடமிருந்து ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலரை ஈரோடு லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சிறுவலூர் எலந்தககாடு பகுதி யைச் சேர்ந்தவர் முத்துசாமி (60), விவசாயி. இவரது தந்தை அர்த்தநாரிக்கவுண்டர் 22 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்ட நிலையில், வாரிசு சான்று வழங்கக்கோரி சிறு வலூர் கிராம நிர்வாக அலுவலர் கந்தசாமியிடம் ஓர் ஆண்டிற்கு முன்பு விண்ணப்பித்து இருந்தார். இந்நிலை யில், வாரிசு சான்றிதழ் வழங்க கிராம நிர்வாக அலுவ லர் கந்தசாமி முதலில் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு பெற்றுள்ளார். அதைத்தொடர்ந்து மீண்டும் ரூ.10 ஆயி ரம் கொடுக்க வேண்டும் என முத்துசாமியை நிர்பத்தபடுத்தி யதுடன், மன உளைச்சலுக்கு ஆளாகிக்கியுள்ளார்.
அதனைத்தொடர்ந்து முத்துசாமி, ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் புகார் அளித்தார். அத னடிப்படையில் முத்துசாமியிடம் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் ரசாயன பவுடர் தடவிய ரூபாய்நோட்டுகளை வழங்கி உள்ளனர். அந்த பணத்தை முத்துசாமி கிராம நிர்வாக அலுவலர் கந்தசாமியிடம் வழங்கியபோது, அங்கு மறைந்து இருந்த ஈரோடு மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை துணை கண்காணிப்பாளர் திவ்யா மற்றும் ஆய்வாளர் ரேகா தலைமையிலான காவல் துறையினர் கிராம நிர்வாக அலுவ லர் கந்தசாமியை கைது செய்தனர்.