கோபி. மே 28 - கோபிச்செட்டிபாளைம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணை அருவி பொது முடக்கத்தால் மூடப் பட்டுள்ளது. இதனால் இங்குபரிசல் ஓட்டியவர்கள், மீன் விற்பனை செய்து வந்த பெண்கள் மற்றும் சிறு, குறு வியாபாரிகள் என 500க்கும் மேற்பட்டோர்கள் வருவாய் இழந் துள்ள நிலையில், அரசு நிவாரணம் வழங்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணை அருவிக்கு பண்டிகைக் காலங்களிலும், விடுமுறை தினங் களிலும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில் பொதுமுடக் கம் அறிவிக்கப்பட்டதிலிருந்து அணை மூடப்பட்டது.
இதனால் சுற்றுலாப்பயணிகள் வருகை முற்றிலும் குறைந்துள்ள நிலையில் தடுப்பணை அருவிப்பகுதியில் மீன் விற்பனையில் ஈடுபட்டு வந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் பரிசல் ஓட்டிகள் மற்றும் சிறு,குறுவியாபாரி கள் என 500 க்கும் மேற்பட்டோர் வரு வாய் இழந்து வாடி வருகின்றனர். ஏப்ரல், மே,ஜுன் ஆகிய மூன்று மாதங்களில் நாள் ஒன்றுக்கு 10 ஆயி ரம் முதல் 25 ஆயிரம் வரை சுற்றுலாப் பயணிகள் வருகை இருக்குமென்றும் ஆனால் இந்தாண்டு இந்த மூன்று மாதங்களும் பொதுமுடக்கத்தால் அணை மூடப்பட்டதால் முற்றிலும் வருவாய் இழந்து வாழ்வாதாரம் கேள்விக் குறியாகியுள்ளதாக மீன் விற்பனை செய்யும் பெண் ராணி வேதனையோடு தெரிவித்தார்.
இதுகுறித்து பரிசலோட்டி ராசுக் குட்டி தெரிவிக்கையில், இந்த மூன்று மாத காலத்தில் ஈட்டப்படும் லாபத் தைக் கொண்டு தான் ஆண்டு முழு வதும் குடும்பத்திற்குத் தேவையான அனைத்து வசதிகள் செய்வது பள்ளி கல்லூரிக் கட்டணக் கடன்கள் அடைப்பது என அனைத்தும் நிறை வேற்றி வருவேன். ஆனால் தற்போது வருவாய் இழந்து கடன் வாங்கி குடும் பத்தை நடத்திவருகிறேன், என தெரி வித்தார். இந்நிலையில், கொடிவேரி தடுப் பணை அருவியில் தற்காலிக் கடைகள் அமைத்து வியாபாரத்தில் ஈடுபட்ட வந்த 500 க்கும் மேற்பட்ட வர்களுக்கும், பரிசல் ஓட்டிகளுக்கும், மீன்பிடித் தொழிலாளர்களுக்கும் தமி ழக அரசு உரிய நிவாரணம் வழங்கி வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளர். மேலும் பொதுமுடக்கம் தளர்வு அளிக் கப்பட்டுள்ள நிலையில், கொடி வேரி தடுப்பணை அருவியின் அருகில் மீன் கடைகள் உள்ளிட்ட தற்காலிக்கடைகள் அமைத்து வியா பாரத்தில் ஈடுபட அனுமதியளிக்க வேண்டும் எனவும் மீன் விற்பனை செய்பவர்களும் கோரிக்கை வைத் துள்ளனர்.