tamilnadu

img

அரசு பள்ளியில் மாணவிகளின் கராத்தே பயிற்சியை 10 மாதங்களாக உயர்த்தக்கோரி ஆட்சியரிடம் மனு

 ஈரோடு, ஜூன் 10- அரசு பள்ளி மாணவிகளுக்கு தற் காப்பு கலையான கராத்தே பயிற்சிக் காலத்தை 10 மாதங்களாக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி கராத்தே அசோசியேசன் சார்பில் திங்களன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள் ளனர். ஈரோடு மாவட்டத்தில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு அரசு பள்ளி களில் பள்ளிக்கல்வித்துறை மூலம், தற்காப்பு கலையான கராத்தே கற்றுத்த ரப்படுகிறது. இதனை கற்றுத்த தருவதற்காக கராத்தே அசோசியே சன்களை வைத்து இயக்கப்பட்டு வரு கிறது. இதில், மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவிகளின் எண்ணிக்கை அடிப்படையில் கராத்தே ஆசிரியர்களை நியமித்து, வாரத்திற்கு ஒரு மணி நேரம் கற்றுத் தரப்படுகிறது. இதற்கான பயிற்சிக் காலம் 3 முதல் 6 மாதங்களாக நிர்ணயம் செய்துள்ளது. இதனை 10 மாதங்க ளாக உயர்த்தினால் மாணவிகள் சிறந்த முறையில் தற்காப்பு கலையைப் பயில முடியும்.  எனவே, ஈரோடு மாவட்ட ஆட்சி யர் தலையிட்டு தமிழக அரசிற்கு  பரிந்துரை செய்ய வேண்டும் என வலி யுறுத்தி ஈரோடு மாவட்ட ஸ்போர்ட்ஸ் கராத்தே அசோசியேசன் செயலாளர் சக்திவேல் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதாவிடம் திங்களன்று மனு அளித்துள்ளனர்.