tamilnadu

தினக்கூலியாக ரூ.490 வழங்கிடுக துப்புரவுத் தொழிலாளர்கள் வலியுறுத்தல்

ஈரோடு, அக்.4- மாநகராட்சியில் பணியாற்றும் அனைத்து தொழிலா ளர்களுக்கும் தினக்கூலியாக ரூ.490 வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் ஈரோடு மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர். ஈரோடு மாநகராட்சியில் பணியாற்றும் அனைத்து துப்புரவுத் தொழிலாளர்களுக்கும் தினக்கூலியாக ரூ.490 வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் 5 ஆம் தேதிக்கு முன்பு ஊதியம் வழங்க வேண்டும். துப்புரவு தொழிலாளர்களுக்கும் டெங்கு, மலேரியா, கொசு ஒழிப்பு பணிகளில் ஈடுபடும் நிரந்தர மற்றும் தற்காலிக, சுய உதவிகுழு, ஒப்பந்தம் முறையில் பணியாற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் அடையாள அட்டை உடனடியாக வழங்க வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் வருடம் இரண்டு ஜோடி சீருடையும், கையுறை, காலுறை மற்றும் மூச்சுக் கவ சம் உள்ளிட்ட தேவையான பணி கருவிகளும் மாந கராட்சியால் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழனன்று ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம்  சார்பில் ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங் கோவனிடம் மனு அளித்துள்ளனர். இதில், சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.சுப்பிர மணியன், மாவட்ட பொதுச்செயலாளர் எஸ்.மாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.