tamilnadu

img

மஞ்சள் ஏற்றுமதிக்கு உடனடி முக்கியத்துவம் கொடுத்திடுக ஈரோடு மாவட்ட விவசாயிகள் வேண்டுகோள்

கோபி, அக்.27- தமிழக அரசு மஞ்சள்  ஏற்றுமதிக்கு உடனடியாக முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென வேளாண் குறைதீர் கூட்டத்தில் ஈரோடு மாவட்ட விவசாயி கள் வேண்டுகோள் விடுத் துள்ளனர்.  ஈரோடு மாவட்டத்தில் அனைத் துக் கோட்டாட்சியர் அலுவலகங் கள், வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் வேளாண்மை விரிவாக்க மையங்கள் உள்ளிட்ட இடங்களில் விவசாயிகளின் குறைதீர்க்கும் கூட்டம் காணொலிகாட்சி மூலம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற விவசாயிகள் குடிமாரமத்து பணி கள், பாசன வாய்க்கால்கள் சீர மைப்பு, நெல் கொள்முதல் நிலை யங்களில் உள்ள குறைபாடுகள், விதை கொள்முதல் மற்றும் விற் பனை போன்றவற்றில் உள்ள குறை பாடுகளை மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துரைத்தனர்.  

மேலும், மஞ்சள் ஏற்றுமதியை ஊக்குவிக்க வேண்டும். குறிப் பாக,  இலங்கை உள்ளிட்ட பல நாடு களில் மஞ்சள் தேவை அதிகரித்துள் ளது. இதனால் அந்நாட்டில் மஞ்சள் விற்பனை கள்ளச் சந்தையில் விற் பனை செய்யப்பட்டு வருகிறது. அதேநேரம், தமிழகத்தில் ஈரோடு உட்பட பல மாவட்டங்களில் மஞ்ச ளுக்கு உரிய விலை கிடைக்கா மல் விவசாயிகள் பல ஆண்டுக ளாக இருப்பு வைத்து காத்திருக் கின்றனர். ஆகவே, தமிழக அரசு மஞ்சள் ஏற்றுமதிக்கு உடனடியாக முக்கியத்துவம் கொடுத்து, மஞ் சள் சாகுபடி விவசாயிகளின் வாழ் வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டு கோள் விடுத்தனர்.