tamilnadu

இரவுக் காவலர் பணிக்கு முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம்

 ஈரோடு, செப்.28- கோயில்களில் இரவுக் காவலர் பணியிடங்களுக்கு முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறிருப்பதாவது, இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் பராமரிக்கப்படும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் இரவுக் காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப் பணியிடங்களில் முன்னாள் படைவீரர்களை நியமனம் செய்து நிரப்பப்பட உள்ளது. எனவே, ஈரோடு மாவட் டத்தைச் சார்ந்த 62 வயதுக்குள் உள்ள நல்ல ஆரோக் கியமான விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியான, விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள், அசல் படைவிலகல் சான்று, அடையாள அட்டை, எழுத்துப்பூர்வமான விருப்ப விண்ணப்பத்துடன், ஈரோடு மாவட்ட முன்னாள் படைவீரர் நல துணை இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகலாம் என அச்செய்திக்குறிப்பில் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.