ஈரோடு, ஜூலை 1- வரி உயர்வைக் கண்டித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளா கத்தில் வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். ஈரோடு மாநகராட்சியில் கடந்த ஆண்டு ரூ.2ஆயிரம் சொத்து வரி கட்டியவர்களுக்கு ரூ.20ஆயிரம் என்றும், ரூ.300 கட்டி வந்தவர்களுக்கு ரூ.4ஆயிரம் என்றும் கணினியில் ஏற்றி வைக்கப்பட்டுள்ளதை உடனடியாக நீக்க வேண்டும். அதுவரை பழைய வரியைக் கட்டுவதற்குத் தனி ஏற்பாடு செய்ய வேண்டும். ஒரே கட்டிடத்தில் வீடும், கடையும் இருந்தால் பயன்பாட்டிற்கு தகுந்தார் போல் வரியைக் குறைக்க வேண்டும். சொத்து வரியை உயர்த்தியுள்ள நிலை யில் குப்பை வரியை அரசு அறவே நீக்க வேண்டும். சொத்து வரியோடு கூடுதல் கட்டிடத்திற்கு விதிக்கப்படும் அபராத கட்டணத்தை, ஒரு ஆண் டுக்குப் பின் நீக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி ஈரோடு வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித் துள்ளனர். முன்னதாக ஈரோடு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்களன்று மனு அளிப்பதற்காக வந்திருந்த ஈரோடு வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கத்தின் நிர்வாகிகள் திடீரென முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர்.அப்போது அருகில் இருந்த காவல்துறையினர் முழக்க மிடக்கூடாது என தடுத்தனர்.