உயிருக்கு பாதுகாப்பு கேட்டு தொழிலாளி மனு
ஈரோடு, ஜூன் 10- உயிருக்குப் பாதுகாப்பு கேட்டு விவசாயக் கூலி தொழிலாளி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளார். ஈரோடு மாவட்டம், சென்னிமலை வாய்ப்பாடி கிராமம் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் காலனியில் வசித்து வருபவர் அய்யாவு (57). இவரது மனைவி சரசு (50). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் கூலி வேலை செய்து வருகிறார்கள். இந்நிலையில் எளையம்பாளையத்தைச் சேர்ந்த செல்லமுத்து என்பவருக்குச் சொந்தமான பூமியில் ஓலை குடிசை அமைத்துத் தங்கி, அவரது சுமார் 9 ஏக்கர் நிலத்தை பராமரித்து பாதுகாத்து வந்துள்ளார். இவ்வாறு கடந்த நான்கு வருடங்களாக அப்பகுதியில் வசித்து வந்த நிலையில் மே 29 ஆம் தேதி மாலை 5 மணி அளவில் அய்யாவு மின்மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து தென்னை மரங்களுக்கு பாய்ச்சிக் கொண்டு இருந்துள்ளார்.அப்பொழுது தோட்டத்திற்கு அருகே உள்ள செந்தில்குமார் (37)என்பவர் அங்கு அரிவாளுடன் வந்து தகாத வார்த்தைகளால் பேசி மோட்டாரைப் பயன்படுத்தக்கூடாது என எட்டி உதைத்து அரிவாளால் வெட்ட முற்பட்டுள்ளார். இத்தாக்குதலால் நிலை குலைந்த அய்யாவு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்நிலையில் அய்யாவுக்கும், அவரது குடும்பத்தி னரின் உயிருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளதாக மே 30ஆம் தேதி காவல் நிலை யத்தில் புகார் அளித்துள்ளனர். புகார் குறித்து இது வரை எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளார்.
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
ஈரோடு, ஜூன் 10- ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்தக்கூடாது. குழந்தைகளை வேலைக்கு அனுப்பு வது, பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய குற்றமாகும். குழந்தை தொழிலாளர்கள், படிப்பை பாதியில் நிறுத்தி யவர்களை வேலைக்கு அனுமதிக்கக்கூடாது. அதுபோன்ற வர்களை குழந்தை தொழிலாளர் நலப்பள்ளி அல்லது பிற பள்ளிகளில் கல்வி பயில அனுமதிக்க வேண்டும்.குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தினால் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் இரண்டு ஆண்டு சிறை தண்டணை விதிக்க நேரிடும் என வலியுறுத்தி நடைபெற்ற பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய இப்பேரணி குமலன்குட்டை மற்றும் முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் ஆட்சியர் அலுவலகத்தை வந்தடைந்தனர்.