அந்தியூர் தாலுகாவில் சுகாதார நடவடிக்கைகளை தீவிரப்படுத்திடுக மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
ஈரோடு, செப்.25-அந்தியூர் தாலுகாவில் பொதுமக்கள் நோய் தொற்று பாதிப்பிற்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளதால் உடனடியாக சுகாதார நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் அந்தியூர் தாலுகா செயலாளர் ஆர்.முருகேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தற்போது மழைக் காலம் துவங்கி உள்ளதால் அந்தியூர் பேரூராட்சி பகுதி களில் மழைநீர் மற்றும் சாக்கடை நீர் ஆங்காங்கே தேங்கி கிடப்பதால் டெங்கு, மலேரியா, வைரஸ் காய்ச்சல் போன்ற நோய்களை பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாக வாய்ப்புள்ளது. எனவே, பேரூராட்சி நிர்வாகம் முன் னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் மற்றும் சாக் கடைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண் டும். சுகாதாரமான முறையில் பாதுகாத்து கொசு மருந்து அடிப்பது உள்ளிட்ட முன்னெச்செரிக்கை நட வடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும், அந்தியூர் பேரூராட்சி நிர்வாகம் குடிநீர் கட்டணம் மற்றும் குடிநீர் இணைப்பு பெறுவதற்கான டெபாசிட் கட்டணம் ஆகியவற்றை மக்கள் விரோதமாக உயர்த்தியுள்ளது. அதேநேரம், இரண்டு நாட்களுக்கு ஒருமுறைகூட மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட பவானி ஆற்றுக் குடிநீர் வழங்குவதில்லை. ஆகவே, இரண்டு நாட்க ளுக்கு ஒருமுறை சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அந்தியூர் நகர மக்களுக்கு வழங்கப்படவேண்டும். இதேபோல், அந்தி யூர் பேரூராட்சி நகரப்பகுதி மக்களிடம் எவ்வித முன்ன றிவிப்பும் இன்றி வீடுவீடாக கணக்கெடுப்பு, டிஜிட்டல் முறைக்காக என்று ஏதேதோ காரணங்கள் கூறி ஒரு வீட்டிற்கு ரூ.30 வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே பொதுமக்களிடம் அந்தியூர் பேரூராட்சி நிர்வாகம் தேவையில்லாத, முன்னறிவிப் பில்லாமல் செய்யும் வசூல் நடைமுறையை உடனடியாக கைவிடவேண்டும். அந்தியூர் பேரூராட்சிப் பகுதிக்குள் அரசால் தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி விற்பனை என்பது எவ்வித தங்குதடையும் இல்லாமல் நடைபெறுகி றது. இதேபோல், 24 மணிநேரமும் எவ்வித தடையும் இல்லாமல் மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. ஆகவே, இனியும் தாமதிக்காமல் உடனடியாக இந்த சட்ட விரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண் டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
போலி ஆவணம் கொடுத்து விசா பெற முயற்சி தனியார் பாஸ்போர்ட் ஏஜென்ட் கைது
கோவை, செப்.25-அமெரிக்கா விசா பெற போலி ஆவணம் தயாரித்து கொடுத்த தனியார் பாஸ்போர்ட் நிறுவனத்தின் பொறுப்பாளர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரக உதவி மண்டல பாதுகாப்பு அதிகாரி ஷேன் பிரவுன் கடந்த 20 ஆம் தேதியன்று கோவை மாநகர குற்றப் பிரிவு காவல்துறையினரிடம் புகார் மனு அளித்தார். அம்மனுவில், கோவை ஆவாரம்பாளையம் சாலையில் உள்ள தி ஆல்பட்ரோஸ் என்ற தனியார் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பாஸ்போர்ட் விசா பெற்றுத் தரும் பணிகளை செய்து வருகிறது. இந்நிலையில் கலை மணி, சதீஷ்குமார் என்பவர்களிடம் இந்த நிறுவனம் அமெரிக்காவில் வேலை வாங்கி தருவதாக கூறி முன் தொகை பெற்றுள்ளது. இதையடுத்து, வாடிக்கையாளர்களை அமெரிக்கா அனுப்ப விசா பெறுவதற்காக வாடிக்கையாளர்களின் பெயரில் போலி ஆவணங்களை இந்நிறுவனம் தயார் செய்துள்ளது. இதனை சென்னை அமெரிக்க தூதரகம் ஆவணங்கள் அனைத்தும் போலி என கண்டு பிடித்து உறுதி செய்துள்ளது. எனவே, அந்நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனு வில் தெரிவித்திருந்தார். இந்த புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் அந்நிறுவனத்தின் தலைமைப் பொறுப் பாளர் நிவீஷ் (27) என்பவரை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். முன்னதாக, அந்நிறுவனத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட் டுள்ளது குறிப்பிடத்தக்கது.