tamilnadu

முகாம் அலுவலகத்தில் மக்களை சந்திக்க மறுக்கும் மாவட்ட ஆட்சியர் 

ஈரோடு, டிச. 23- ஈரோடு மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் மக்களைச்  சந்தித்து குறைகளைக் கேட்க மறுப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. ஈரோடு மாவட்ட ஆட்சியராக ராஜகோபால் சுன்கரா கடந்த ஆண்டு மே மாதம் பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.

இவர் அவசர அவசிய சூழ்நிலைகளில் கூட தனது முகாம் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்களையும், பல்வேறு பிரச்சனைகள் குறித்து தெரிவிக்க வரும் அரசியல் கட்சி கள் மற்றும் அமைப்புகளின் நிர்வாகி களையும் சந்திக்க மறுத்து வரு கிறார்.

 உதாரணமாக  அந்தியூர் வட்டம், வேம்பத்தி ஊராட்சி, கூலிவலசு கிராமத்தில் பட்டியலின மக்களை அச்சுறுத்தும் வகையில் நில உடமையாளர்களுக்கு ஆதர வாக நீர் வழிப்பாதையில் வண்டி  தடம் அமைக்கும் முயற்சி நடை பெற்றது. அதனைத் தடுக்க மாவட்ட ஆட்சியர் தலையிட வேண்டுமென ஊர் கொத்துக்காரர் எஸ்.சித்தன் உள்ளிட்டோர் கடந்த மாதம் 8ஆம் தேதி காலை 8 மணியளவில் மாவட்ட ஆட்சியர் முகாம் அலு வலகத்திற்குச் சென்றனர்.

அவர்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர் பி.பி.பழனிசாமி ஆகியோர் சென்றனர். ஆனால் எந்த சூழ்நிலையிலும் ஆட்சியரை முகாம் அலுவலகத்தில் சந்திக்க முடியாது என்று கூறப்பட்டது.

மேலும் காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மட்டுமே சந்திக்கலாம் என தெரிவிக்கப் பட்டது.  மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் மட்டுமின்றி, தனது குடி யிருப்பான முகாம் அலு வலகத்திலும் பொதுமக்களை சந்திக்க வேண்டும். இவ்வாறு முகாம் அலுவலகத்திலும் சந்திக்க லாம் என்பது அவசர அவசியம் சார்ந்த பிரச்சனைகளை, குறைபாடு களை அவரது கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும், அவரது தலையீட்டின் காரணமாக எந்தவிதமான பதற்றம் இல்லாமல் சமூக அமைதியை நிலை நிறுத்த வேண்டும் என்பதற்காக  இந்நடைமுறை பின்பற்றப்படு கிறது.

 ஆனால் ஈரோடு மாவட்ட ஆட்சி யராக செயல்பட்டு வந்த கிருஷ்ணன் உண்ணியைப் போல ராஜகோபால் ஆட்சியர் பொறுப்பிற்கு வந்த பிறகு முகாம் அலுவலகத்தில் யாரையும் சந்திக்க மறுத்து வரு கிறார். காலங்காலமாக இருந்த நடைமுறையை தூக்கி எறிந்துவிட்டு கடந்த 4 ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் பொதுமக்களை சந்திக்க மறுப்பது ஏற்கத்தக்கதல்ல.  

எனவே, தலைமை செயலாளர் தலையிட்டு ஈரோடு மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் பொதுமக்களையும், அரசியல் கட்சி யினரையும், அமைப்புகளின் பிரதி நிதிகளையும் சந்திப்பது, குறை களைக் கேட்பது என்ற நடை முறையை தொடர்ந்திட அறிவுறுத்து மாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு சார்பில் செயலாளர் ஆர்.ரகுராமன் தமிழ்நாடு அரசின் தலைமை செய லாளருக்கு அனுப்பிய கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.sa