tamilnadu

img

குழிகளுக்கு இலைதழையிட்டு மறைப்பு விபத்து ஏற்படும் அபாயம்

ஈரோடு,மே 23-ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட சம்பத்நகர் நகர் பகுதியில் சிந்தாமணி பெட்ரோல் பங்க் பின்புறமுள்ள 30 அடி சாலைபல இடங்களில் குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இந்நிலையில், கடந்த 2 வாரங்களாக ஈரோடு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், சாலைகள் மேலும்அதிக அளவில் பழுதாகின. இந்நிலையில்தற்போது விபத்து ஏற்படுத்தக்கூடிய மரணக்குழிகளாக மாறியுள்ளது. மேலும், அதேபகுதியில், பாதாள சாக்கடைக்குகுழி தோண்டப்பட்டு மூடப்படாமல் அப்படியே பள்ளமாக உள்ளது. பெட்ரோல்பங்க் துவங்கும் போது அதற்காக குழி தோண்டப்பட்ட மண் முழுவதும் 30 அடி சாலை துவக்கத்தில் இருந்து பெட்ரோல் பங்க் வரை நசியனூர் சாலை வரை தேண்டப்பட்ட மண்ணை கொட்டியுள்ளனர். இதனால் அதில், ஓடிக்கொண்டிருந்த சாக்கடை முழுமையாக மூடப்பட்டது. சாலையில் உள்ள குழிகளை இலை தளைகளை போட்டு மூடியுள்ளனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக மழைபெய்யும் பொழுது நாராயணவலசில் இருந்து வரும் மழைநீர், சாக்கடைநீரோடு கலந்து பெரும் வெள்ளமாக சாலை வழியாக அப்பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து பெரும் சிரமத்தை உண்டாக்கி வருகிறது. எனவே சாலையை சீரமைத்து, வடிகள் வசதி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.