ஈரோடு, பிப்.24- கரோனா வைரஸ் அறிகுறி இருக்கலாமென்ற சந்தேகத்தில் தனி வார்டில் வைத்து சிகிச்சை அளித்து வந்த இளைஞர் ஒருவர் தீடீரென தப்பிச்சென்ற சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் வசித்து வருபவர் விஸ்வநாத். இவர் சீனாவில் உள்ள சின் ஜியங் பல்கழைக்கழக மருத்துவ கல்லூரியில் மருத்துவம் படித்து வருகிறார். இந்நிலையில் சீனாவில் கரானா வைரஸ் பரவி பலர் இறந்து வரும் நிலையில் கடந்த 15 ஆம் தேதி சொந்த ஊரான பெருந்துறைக்கு வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து இவருக்கு சளி, இருமல் தொல்லை இருந்ததால் பெருந்துறை ஐ.ஆர்.டி அரசு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கரானா வைரஸை உறுதி செய்ய இவருடைய ரத்த மாதிரி அனுப்பப்பட்ட் நிலையில் சனியன்று மருத்துவமனையை விட்டு தப்பியுள்ளார். இதையடுத்து தப்பிச்சென்ற அந்த வாலிபர் அவருடைய வீட்டில் இருப்பதாக தெரியவந்தது. இதனிடையே அவரை தனி அறையில் இருப்பது நல்லது என மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.