tamilnadu

img

கொரோனா வைரஸ் எதிரொலி- எல்லையோரங்களில் முழுவீச்சில் வாகன சோதனை

ஈரோடு, மார்ச்  16- தமிழகம் - கர்நாடக எல்லை யோரச் சோதனைச்சாவடிகளில் கொரோனா அச்சுறுத்தலின் முன் னெச்செரிக்கை நடவடிக்கையாக போலீசார் மற்றும் மருத்துவக்கு ழுவினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் - கர்நாடகத்தை இணைக்கு முக்கிய வழித்தடமாக திம்பம் மலைப்பாதை உள்ளது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த பாதை வழியாக பயணிப்பதால் குற்றத்த டுப்பு நடவடிக்கையாக ஆசனூர்  மற்றும் பண்ணாரியில் போலீஸ்  சோதனைச் சாவடி அமைக்கப்பட் டுள்ளது. தமிழகம் கர்நாடக இடையே பயணிக்கும் இரு மாநில வாகனங்களை சோதனைச் சாவடி யில் தடுத்து நிறுத்தி வாகன தணிக்கை செய்யப்படுகிறது. கர்நாடகத்தில் கொரோனாவால் ஒருவர் உயிரிழந்த நிலையில் நோய் தடுப்பு நடவடிக்கையாக கர்நாடகத்தில் இருந்த வரும் வாகனங்களில் பயணிப்போரிடம் வாகன உரிமம், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட சட்ட ஆவணங்களை வாங்கி ஆய்வு செய்யும்போது கொரோன தொற்று பாதிப்பு  ஏற்ப டாதபடி முன்னெச்சரிக்கை நடவ டிக்கையாக போலீசாருக்கு முகக் கசவம் மற்றும் கையுறை வழங்கப் பட்டுள்ளது. அதை அணிந்தபடி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.  மேலும், ஈரோடு மாவட்டம், சுகாதாரப்பணிகள் துணை இயக் குநர் சவுணடம்மாள் உத்தரவின்  பேரில் தாளவாடி வட்டார ஆரம்ப  சுகாதார நிலைய மருத்துவ அலுவ லர் டாக்டர் சிவா தலைமையில் மருத்துவக்குழுவினர் கர்நாட காவில் இருந்து வருவோரிடம் காய்ச்சல் அறிகுறி உள்ளதா என சோதனை செய்து வருகின்றனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சத்தியமங்கலம் அருகே இரு மாநில எல்லையில் மருத்துவக்குழுவினர் முகாமிட்டு கர்நாடகாவில் இருந்து தமிழ கம் நோக்கி வருவோரிடம் காய்ச்சல் அறிகுறி உள்ளதா என  சோதனையிடும் பணியில் ஈடுபட் டுள்ளனர். சத்தியமங்கலம், மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காரப்பள்ளம் வன சோத னைசாவடி அருகே முகாமிட்டுள் ளனர். கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழகம் நோக்கி வரும் வாகனங்க ளில் பயணிகளிடம் காய்ச்சல் அறி குறி உள்ளதா என கேட்டறிந்து  காய்ச்சல் அறிகுறி உள்ளவர்க ளுக்கு தெர்மல் பரிசோதனை  பயன்படுத்தி உடல் வெப்பநிலை  கண்டறியும் பணி மேற்கொள்வ தோடு பஸ் உள்ளிட்ட வாகனங்க ளில் ஸ்டியரிங், கைப்பிடிக் கம்பி, படிக்கட்டு பக்கவாட்டு கம்பி உள்ளிட்ட கை படும் பகுதிகளில் லைசால் மருந்து தெளிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.