மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் தோழர் ஏ.நல்லசிவம் அவர்களின் நினைவு நாளில் ஈரோடு சிபிஎம் மாவட்டக்குழு அலுவலகத்தில் அவரது படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், செயற்குழு உறுப்பினர்கள் பி.பி.பழனிசாமி, ஆர்.கோமதி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.