tamilnadu

பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை மூட ஆட்சியர் எச்சரிக்கை

ஈரோடு, அக்.31- ஈரோடு மாவட்டத்திலுள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூ ராட்சி, ஊராட்சி மற்றும் தனியார் விவசாய நிலங்களில் உள்ள பயனற்று தூர்ந்துபோன மற்றும் தற்காலிகமாக பழுத டைந்துள்ள ஆழ்துளை கிணறுகளை பாதுகாப்பான முறையில் மூட மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ஈரோடு  மாவட்டத்தில் உள்ள தனியார் தோட்டங்கள் மற்றும் நிலங்கள், அரசுக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் உள் ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான நிலங்களில் பயன் பாடற்ற ஆழ்துளை கிணறுகள் இருப்பின்  பொதுமக்கள்  அதனை உடனே சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி செய லர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களிடம் தகவல்  தெரிவிக்க வேண்டும். தனியார் நிலங்களிலுள்ள பயனற்ற ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்த வெளியிலுள்ள  தூர்ந்துபோன கிணறுகளை சம்பந்தப்பட்ட நில உரிமை யாளர்கள் போர்க்கால அடிப்படையில் மூட வேண்டும். தனி யரால் நிறுவப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் மூடப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டால் கடுமையான அபராதம் விதிக்கப்படுவதுடன், காவல்துறை மூலமும்  நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  அதேபோல் அரசுத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள்  மூலம் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் ஏதேனும் பாதுகாப்பான முறையில் மூடப் படாமல் இருப்பது கண்டறியப்பட்டால் அதற்கு பொறுப் பான அனைத்து அலுவலர்கள் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வருவாய்த்துறை அலுவலர்கள், மாநகராட்சி ஆணையர், நகராட்சி ஆணையர்கள் பேரூ ராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் மற்றும்  வேளாண்மைத்துறை அலுவலர்கள் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு மூடப் படாமல் இருக்கும் பயனற்ற ஆபத்தான நிலையில் இருக்கும் ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்தவெளி தூர்ந்து  போன கிணறுகளை கண்டறிந்து (தனியார் நிலம் உட்பட) அவற்றை உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். அவ்வாறு மூடப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ள பயனற்ற கிணறுகள் ஏதேனும் கண்டறியப்பட்டால் பொது  மக்கள் 1077 மற்றும் 0424 - 2260211 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு உடனடியாக தகவல் தெரி விக்கலாம் என ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.