tamilnadu

img

நீர்நிலைகள் பராமரிப்பு குறித்து மத்தியக்குழு ஆய்வு

ஈரோடு, ஜூலை 10- ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், சலங்கபாளையம் மற்றும் பி.மேட்டுப்பாளையம் பேரூராட்சி மற்றும் பவானிசாகர் அணை பகுதி களில் புதனன்று நீர் நிலைகள் பராமரிப்பு குறித்து மத்தியக்குழு ஆய்வு மேற்கொண்டது. ஈரோடு மாவட்டத்தில் நீர் நிலை கள் பராமரிப்பது குறித்தும், புதிய தடுப்பணைகள் கட்டுதல், குளம் மேம்பாடு செய்தல், நீர் உறிஞ்சு குழி கள் அமைத்தல் மற்றும் கசிவு நீர் குட்டைகள் அமைத்தல், நாற்றங்கால் அமைத்தல் மற்றும் மரக்கன்றுகளை நட்டு பராமரித்தல் போன்ற பணிகளை நடைமுறைப்படுத்தவும்,1240 நீர் நிலைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகளை துரிதப் படுத்தவும், ரூ.17 கோடி மதிப்பீட் டில் நடைபெற்று வரும் 65 குடி மராமத்து பணிகளை விரைந்து முடிக்கவும், மேலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட் சிப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழை நீர் சேகரிப்பு அமைப் பினை உறுதிபடுத்தவும், திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளா கத்தில் மாவட்ட ஆட்சியர் சி.கதிர வன் மத்திய தகவல் மற்றும் ஒலி பரப்பு இணைச் செயலாளர், டி.சி.ஏ.கல்யாணி மற்றும் மத்திய குழு உறுப்பினர்கள்  ஆகியோர் பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து, ஈரோடு மாந கராட்சி மற்றும் சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், முருங்கத்தொழுவு பகுதிகளில் மத்தியக்குழு உறுப்பி னர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.  இதன்தொடர்ச்சியாக, 2-ஆம் நாளான புதனன்று பெருந்துறை வட்டம், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் மற்றும் அலு வலர்கள் கலந்து கொண்ட மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியினை துவக்கி வைத்தனர்.