ஈரோடு, நவ. 3- சத்தியமங்கலம் அருகே கூண்டு வைத்து பிடிக்கப்பட்ட சிறுத்தை மீண்டும் கிராமத்திற்குள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். சத்தியமங்கலம் அருகே உள்ள குய்யனூர் பகுதியை சேர்ந்தவர் அருணாசலம். இவருக்கு அப்பகுதியில் தோட்டம் உள்ளது. கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு வனப்பகுதியிலி ருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று அவரது தோட்டத்தில் கட்டப்பட்டு இருந்த இரண்டு ஆடுகளை அடித்து கொன்றது. இதனால் அக்கிராம மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஆகவே, சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறை யினரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் கோரிக் கையை ஏற்று வன அதிகாரிகள் அவ ரது தோட்டத்தில் கூண்டு வைத்தனர். இதன்பின்னர் தோட்டத்துக்குள் புகுந்த சிறுத்தை அந்த கூண்டில் சிக்கியது. பிறகு அந்த சிறுத்தைக்கு கால்நடை மருத்துவர்கள் மயக்க ஊசி போட்டு கூண்டுடன் கொண்டு சென்று தெங்குமரஹடா செல்லும் அடர்ந்த வனப்பகுதியில் மாயாற்று படுகையில் திறந்து விடப்பட்டது. இந்நிலையில், குய்யனூர் பகுதி மக்களுக்கு மீண்டும் அதிர்ச்சி அளிக் கும் வகையில் ஆடுகளை அடித்து கொன்று தின்று ருசி கண்ட அதே சிறுத்தை மீண்டும் அதே கிராமமான குய்யனூர் அருணாசலம் தோட்டத் திற்குள் வெள்ளியன்று அதிகாலை புகுந்தது. மேலும் அங்கு கட்டப்பட்டி ருந்த 4 ஆடுகளில் ஒரு ஆட்டை அடித்து கொன்றது. இதையடுத்து வெள்ளி யன்று காலை மீண்டும் சிறுத்தை தோட்டத்துக்குள் புகுந்து ஆட்டை கொன்றதை அங்கு பாதுகாப்பு பணி யில் இருந்த விவசாயி அருணாசலம் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவலறிந்து அக் கிராம மக்கள் அங்கு திரண்டனர். மேலும் இதுகுறித்து வனத் துறை யினருக்கும் தகவல் கொடுத்தனர். மீண்டும் ஊருக்குள் புகுந்த சிறுத் தையை பிடித்து திரும்பி வரமுடியாத அளவு மலை மேலே உள்ள காட்டில் கொண்டு விட வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், இக்கோரிக்கையை வலி யுறுத்தி கிராம மக்கள் சிறுத்தை யால் கொல்லப்பட்ட ஆட்டின் உடலு டன் சத்தியமங்கலம் - மைசூர் சாலை யில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன்பின் சம்பவ இடத்துக்கு வனத்துறையினரும், காவல்துறையினரும் சென்று சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். விரைவில் அந்த சிறுத்தையை பிடித்து விடுவதாக வனத்துறையினர் உறுதி யளித்தனர். இதையடுத்து பொது மக்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்