tamilnadu

img

அனைத்து மாவட்டங்களில் புற்றுநோய் பரிசோதனை!

ஈரோடு, ஆக. 12- மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பி ரமணியன் ஈரோட்டில் பேட்டி அளித்துள்ளார்.

அதில் “தமிழகத்தில் ஈரோடு, ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களில் சாயக்கழிவு, தோல் தொழிற்சாலை, ரப்பர் உற்பத்தி கழிவுகளால் புற்றுநோய் பாதிப்பு அதிகம் இருப்பதாக சொல்லப்பட்டது. இந்த 4 மாவட்டங் களில், 4.19 லட்சம் பேருக்கு மேற்கொள்ளப் பட்ட பரிசோதனையில், 176 பேருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப் பட்டது. இதில், ஈரோடு மாவட்டத்தில், 50  பேருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படு கிறது. இந்த ஆண்டு அனைத்து மாவட்டங்களிலும், புற்றுநோய் பாதிப்பு குறித்த பரிசோதனைகள் நடத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.