ஈரோடு, ஜூலை 1- ஈரோடு மாவட்டம் வில்லரசம் பட்டி அருகே புதிய சாய ஆலை அமையும் இடத்தில் காற்று மற்றும் நீரின் தரத்தை ஆய்வு செய்ய வேண் டும் என ஆட்சியரிடம் அப்பகுதி மக் கள் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக அளித்த மனுவில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள வில்லரசம்பட்டி கோவில் பகுதியில் உள்ள சாய ஆலையால் நிலத்தடி நீரில் உப்புத்தன்மை அதிகமாகி உபயோகப்படுத்த முடியாத அளவிற்கு மாசு அதிகரித்துள்ளது. விவசாயம் நிறைந்த அப்பகுதியில் சாய ஆலைகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கருவில்பாறை குளத்தில் நீர் மிகுதியால் பெரிய அக்ரஹாரம் பகுதியில் இருந்து சுண் ணாம்பு ஓடை பகுதி வரை மாசு அதி கரித்துக் கொண்டே வருகிறது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஜிபிஎஸ் சேட்டிலைட் படத்துடன் உதவியுடன் ஆலைகள் அமைவி டத்தை ஆய்வு செய்து அனுமதி அளித்திருந்தால் இந்தப் பிரச்சனை இருந்திருக்காது.அந்த தொழில்நுட்பம் வருவாய் துறையி னர் இடமும், பொதுப்பணித் துறை இடமும் இருந்திருந்தால் சுலபமாக நீர்வழிப்பாதை நீரில், சாயக்கழிவு உள்ளத்தை ஜிபிஎஸ் படத்தின் மூலம் அறிய முடியும். ஆனால் அதை செய்வதில்லை.நீர் வழிப்பாதை, விவசாய நிலம் ஆகி யவற்றில் சாய ஆலை செயல்பட்டு வருகிறது. இந்தப் பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். சாய ஆலை முறை கேடாக அமைத்து அவற்றில் இருந்து வெளியேறும் கழிவுகள் நீர் வழிப்பாதையிலும்,விவசாய நிலத்திலும் கலக்கப்படுகிறது. மாசு உள்ள வேதிப்பொருள் களின் வாயு (பாஸ்பேட்) காற்றில் கலக்கிறது. இவற்றை சுவாசிக்கும் மக்களுக்கு சுவாசக் கோளாறு, நுரையீரல் நோய், புற்றுநோய் மற் றும் பல நோய்கள் ஏற்படுகிறது என மனுவில் தெரிவித்துள்ளனர்.