ஈரோடு, டிச. 10- அரசு குறிப்பிட்ட அளவுக்கு மேல் அதிகமாக வெங்காயத்தை பதுக்கி வைத்தி ருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படு மென அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தமிழகம் முழுவதும் வெங்காயத்தின் விலை தொடர்ச்சியாக ஏறுமுகமாக உள் ளது. ஈரோட்டில் செவ்வாய்க்கிழமை சின்ன வெங்காயம் கிலோ ரூ.120 முதல் 160 வரைக் கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.130 முதல் 150 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஈரோடு உள்பட மாவட்டம் முழுவதும் வெங்காயத்தை பதுக்கி வைத்துள்ளார்களா என்ற சந்தேகத் தின் அடிப்படையில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து உணவு பாதுகப்புதுறை அதிகாரிகள் கூறுகையில், ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர், பவானி பகுதிக ளில் கடைகள் மற்றும் சில குடோன்களில் சோதனை நடத்தினோம். அரசு குறிப்பிட்ட அளவுக்கு மேல் அதிகமாக அங்கு வெங்கா யம் இல்லை. குறிப்பிட்ட அளவுக்கு மேல் வெங்காயத்தை பதுக்கி இருந்தால் குற்றவி யல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி னர். மேலும், அதிக லாபத்துக்கு ஆசைப் பட்டு வெங்காயத்தை பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேவைப்பட்டால் கைது நடவடிக்கையும் எடுக்கப்படும் என அதிகாரிகள் கடுமை யாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.