ஈரோடு, ஜூன் 18- ஈரோட்டில் பிரப் சாலையின் பெயர் மாற்றத்தை எதிர்த்து தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக்குழுவின் சார்பில் பெரியார் மன்றத்தில் செவ்வாயன்று தொடர் முழக்கப் போராட்டம் நடை பெற்றது. தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் சார்பில் அருட்பணி அந்தோணி வாட்சன் பிரபு ஈரோடு மாநகருக்கு செய்த நல்ல சமூக செயல்பாட்டின் காரணமாக பிரப் சாலை என பெயரிடப்பட்டது. தற்பொழுது இச்சாலை பெயர் மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்தும், அதனை மீண்டும் அதே பெயரில் அந்த சாலையை நீடிக்க செய்ய வேண்டும் என வலியுறுத்தி யும் தமிழக அரசை வலியுறுத்தி தொடர் முழக் கப் போராட்டம் ஈரோடு பெரியார் மன்றத் தில் செவ்வாயன்று நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக்குழு மாவட்ட தலை வர் கே.எஸ்.இஸரத்தலி, மாவட்ட உதவி தலைவர் டி.விஜயகுமார், மாவட்ட பொரு ளாளர் கே.நடராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் ப.மாரிமுத்து, மாவட்ட உதவி தலைவர் சுப்பிரமணி, காசிபாளையம் பேரூராட்சி யின் முன்னாள் தலைவர் கே.துரைராஜ், ஸ்ரீவாசவி கல்லூரியின் முன்னாள் முதல் வர் ஜெயசங்கர், அல் அமீன் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியின் தாளாளர் அப்துல் சத் தார், வாழ்வுரிமை அறக்கட்டளையின் தலைவர் ஷேக் முஹைதீன் மற்றும் வழக் கறிஞர் கிறிஸ்டோபர் உட்பட பலர் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர். முன்னதாக இப்போராட்டமானது ஈரோடு காளைமாடு சிலை அருகில் நடைபெற இருந்த நிலையில், காவல் துறையினர் அனுமதி மறுத்ததால் பெரி யார் மன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.