tamilnadu

img

ஈரான் வான்வெளியை தவிர்க்க இந்தியா முடிவு

ஈரானில் அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பின் அந்நாட்டு வான்வெளியை தவிர்க்க இந்திய விமானச் சேவை நிறுவனங்கள் சனியன்று தீர்மானித்துள்ளன. அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் சுட்டு வீழ்த்தப் பட்டதாக ஈரான் தெரிவித்த பின் னர் இந்த பகுதிக்கு உட்பட்ட வான்வெளி வழியாக வெளிநாட்டு விமானங்கள் இயக்கப்பட வில்லை. குறிப்பாக, அமெரிக்கா, சீனா, பிரிட்டன், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த விமானங்கள் மாற்றுப்பாதை வழியாகத்தான் வளைகுடா நாடுகளுக்கு சென்று வருகின்றன.

இந்நிலையில், இவ்விவகா ரம் தொடர்பாக இந்திய விமான போக்குவரத்துத் துறை இயக்கு னரகத்துடன்  நம் நாட்டில் உள்ள விமானச் சேவை நிறுவனங்களின் பிரதிநிதிகள் சனியன்று ஆலோ சனை நடத்தினர். இந்த ஆலோசனைக்கு பின் னர் ‘பயணிகளின் பாதுகாப்பு கருதி ஈரானின் ஹோர்முஸ் ஜல சந்தி மற்றும் ஓமன் வளைகுடா பகுதிகளை தவிர்த்துவிட்டு மாற்றுப் பாதையில் இந்திய விமா னங்கள் இயக்கப்படும்’ என தெரி விக்கப்பட்டுள்ளது.