tamilnadu

img

ஈராக் ராணுவ தளபதி பலி- 3வது உலகப்போருக்கான துவக்கப்புள்ளி -பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை

ஈராக் ராணுவத்தளபதி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் 3வது உலகப்போருக்கான துவக்கப்புள்ளி என்று சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள விமான நிலையத்தின் மீது அமெரிக்க ராணுவம்  ராக்கெட் குண்டுகள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
ஈராக் தலைநகர், “பாக்தாத் சர்வதேச விமான நிலையம் மீது 3 ராக்கெட்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ராணுவ தளபதி உட்பட 8 பேர்  கொல்லப்பட்டனர். விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்கள் வெடித்து சிதறின. ராக்கெட்டுகள் விமான நிலையத்தில் சரக்குகள் கையாளும் பகுதியில் விழுந்து வெடித்தன” என்று ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவின் பேரிலேயே ஈராக் ராணுவ தளபதியை குறிவைத்து தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.  ஈராக் ராணுவ தளபதி, அமெரிக்க தூதரக அதிகாரிகள் மீதும் படை வீரர்கள் மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்ட திட்டம் வகுத்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும், காசிம் சுலைமானி, அமெரிக்காவால் தீவிரவாதி என அறிவிக்கப்பட்டவர்கள் கொல்லப்பட்டனர் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. 
இந்நிலையில் அமெரிக்கப்படைகள் தாக்குதலில் ராணுவத் தளபதி உயிரிழந்துள்ளது மூன்றாம் உலகப்போருக்கான தொடக்கப்புள்ளி என்ற சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 
 

;