tamilnadu

img

மழை பெய்தாலும் திட்டமிட்டபடி சந்திராயன்-2 விண்ணில் ஏவப்படும் - சிவன்

திங்களன்று மழை பெய்தாலும் திட்டமிட்ட படி சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். 
திருப்பதியில் இஸ்ரோ தலைவர் சிவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,  சந்திராயன்-2 விண்கலத்தை திங்கட்கிழமை அதிகாலை 2.51 மணியளவில் விண்ணில் செலுத்துவதற்கான பணிகள்  நடைபெற்று வருகிறது. ஜூலை-15ல் விண்ணில் ஏவப்படும் சந்திராயன்-2 விண்கலம் நிலவின் தென் துருவத்தை ஆராயும். விண்ணுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் 2022-க்குள் நிறைவேற்றப்பட உள்ளது.
மேலும் மழை பெய்தாலும், மழையால் பாதிக்காத வகையில் விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளதால்  விண்கலம் ஏவப்படுவதில் எவ்வித பாதிப்பும் இருக்காது. மேலும்  மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான செயல்திட்டம் நிறைவு பெற்றுள்ளது என்றார்.
 

;