tamilnadu

img

பாகிஸ்தானில் பேருந்து கவிழ்ந்து 23 பேர் பலி

இஸ்லாமாபாத்
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் இருந்து இன்று காலை ஸ்கார்டு என்ற பகுதிக்குப் பயணிகள் பேருந்து ஒன்று சென்றது. 

சுமார் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இந்த பேருந்து கில்கிட் பகுதிக்கு அருகே உள்ள மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது. ராவுண்டு என்ற இடத்தில் பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்தது. பேருந்து பலத்த சேதமடைந்ததால் பயணிகள் அனைவரும் இடைவெளி இல்லா இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். 

விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 23 பேர் பலியாகினர். 3 பேர் பலத்த காயமடைந்தனர். 

;