இராமேஸ்வரம்,செப்.12- இராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப் பட்டனர். இராமேஸ்வரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் 300 விசைப்படகுகளில் புதனன்று இரவு கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டனர். இவர்களில் ஒரு தரப்பினர் இந்திய கடல் எல்லையையொட்டியுள்ள கச்சத்தீவு அருகே வியாழனன்று அதிகாலையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் இராமேஸ்வரம் மீனவர்க ளிடம், எல்லை தாண்டி வந்துள்ளீர்கள். இங்கு மீன்பிடிக்க அனுமதி இல்லை. உடனே திரும்பி செல்லுங்கள் என எச்சரித்தனர். இதையடுத்து மீனவர்கள் அவசர அவசரமாக வலைகளை எடுத்துக் கொண்டு புறப்பட தயாராகினர். அப்போது இலங்கை கடற்படை வீரர்கள், இராமேஸ்வரம் மீனவர்களின் படகுகளில் ஏறி மீன்பிடி சாதனங்களையும், வலைக ளையும் சேதப்படுத்தினர். மீனவர்கள் பிடித்துவைத்திருந்த டன் கணக்கிலான மீன்களையும் பறிமுதல் செய்ததோடு அங்கிருந்து விரட்டியடித்தனர்.