tamilnadu

img

சாதிச் சான்றிதழ் கிடைக்காமல் தவிக்கும் பழங்குடி குழந்தைகள்

இராமநாதபுரம்:

இராமநாதபுரத்தில் சாதிச்சான்றிதழ் கோரி பள்ளி மாணவ - மாணவியர் உள்ளிட்ட ஏராளமானோர் மாவட்ட ஆட்சியரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காட்டுநாயக்கர் இனமக் கள் பழங்குடியினருக்கான சான்றிதழ் கோரி போராடி வருகின்றனர். மாவட்டத்தில் பழங்குடியினரே இல்லை என்று கூறி அதிகாரிகள் தங்களுக்கு பழங்குடியினருக் கான சான்றிதழை தர மறுப்பதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.


உரிய சாதிச் சான்றிதழை வழங்க வலியுறுத்தி இராமநாதபுரத்தில் உள்ள மாவட்டஆட்சியரின் வீட்டை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய ஆர்.டி.ஓ. உள்ளிட்ட அதிகாரிகள் சான்றிதழ் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.


;