இராமநாதபுரம், ஜூலை 1- இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த 70 வயது ஆண், பார்த்திபனூரைச் சேர்ந்த 55 வயது ஆண் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டிருந்தனர். இவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மாவட்டத்தில் ஒரே நாளில் காவல்துறையினர்,வருவாய் அலுவலர், மருத்துவர்கள், சுகா தாரபணியாளர், நகராட்சி ஊழியர் உட்பட 107 பேருக்கு நோய் தொற் றிருப்பது உறுதி செய்யப்பட் டுள்ளது.