‘இந்தியாவை பாதுகாப்போம்’ இயக்கம்
சென்னை, ஆக. 10 - அந்நிய கம்பெனிகளின் ஆதிக்கத் திற்கு இந்தியாவை கொண்டு செல்லும் மத்திய அரசின் நாசகர கொள்கைகளை எதிர்த்து ‘இந்தியாவை பாது காப்போம்’ என்ற முழக்கத்தோடு திங்க ளன்று (ஆக.10) தமிழகம் முழுவதும் பல ஆயிரம் மையங்களில் விவசாயிகளும், தொழிலாளர்களும் பெரும் போராட்டத் தில் ஈடுபட்டனர். பொதுத்துறை மற்றும் கனிம வளங்கள் தனியார்மயம், பொதுத்துறை களில் அந்நிய முதலீடு அதிகரிப்பு, தொழிற்சங்க சட்டங்கள் திருத்தம், பணி நேரம் அதிகரிப்பு, தொழிலாளர் உரிமைகள் மற்றும் சட்டச்சலுகைகள் பறிப்பு, இலவச மின்சாரம் ரத்து, விவசாயத்தை சீரழிக்கும் போக்கு உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, ‘வெள்ளையனே வெளி யேறு’ இயக்கம் தொடங்கிய ஆக.9 அன்று நாடு முழுவதும் ‘இந்தியாவை பாதுகாப்போம்’ என்று முழக்கத்தோடு போராட்டம் நடத்த மத்திய தொழிற் சங்கங்கள் அறைகூவல் விடுத்தன.
ஆக.9 அன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு என்பதால், ஆக.8 மற்றும் 10ம் தேதிகளில் போராட்டங்கள் நடை பெற்றன. இந்தப் போராட்டங்களில் போக்குவரத்து, ஆட்டோ, கட்டுமானம், தையல், முறைசாரா, சுமைப்பணி, மின் சாரம், விவசாயிகள், விவசாய தொழி லாளர்கள், மலைவாழ் மக்கள், மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஊழி யர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரி யர்கள், ஓய்வூதியர்கள் என பல தரப்பின ரும் ஒன்றுபட்டு களம் கண்டனர். பாஜக தொழிற்சங்கமான பிஎம்எஸ் தவிர நாடு முழுவதும் உள்ள மத்திய தொழிற்சங்கங்கள் இந்த போராட்ட த்தில் பங்கெடுத்தன. ஆலை வாயி ல்கள், அரசு அலுவலகங்கள், தொழிற் பேட்டைகள், தொழிற்சாலைகள், பணி மனைகள், பேருந்து நிலையங்கள், தெருமுனை, வீதிகள், குடியிருப்பு பகுதி கள், விவசாய பணி நடைபெறும் இடங் கள், என பல இடங்களில் போராட்டங் கள் எழுச்சியாக நடைபெற்றன.
சென்னை
சென்னை ஆவடியில் சிஐடியு உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில நிர்வாகி ஏ.வி. சண்முகம், போக்குவரத்து ஊழியர் சங்க மாநில பொருளாளர் சசிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமையகம் முன்பு நடைபெற்ற அனைத்து சங்க ஆர்ப்பா ட்டத்தில் மின்ஊழியர் மத்திய அமைப் பின் தலைவர் தி.ஜெய்சங்கர், பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன், துணைப் பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பேசினர்.
ஜவ்வாது மலை
திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலையில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத் தின் மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு, மலை சங்கத்தலைவர் ஆர்.ஏ. லட்சு மண ராஜா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத்தலைவர் சக்திவேல் உள்ளிட் டோர் பேசினர்.
விவசாயத் தொழிலாளர் சங்கம்
இந்த இயக்கத்தில் தமிழகம் முழு வதும் ஏராளமான மையங்களில் விவ சாயத் தொழிலாளர்கள் பங்கேற்று ஆவேச முழக்கமிட்டனர். மதுரை மாவட் டம் டி.கல்லுப்பட்டியில் விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலை வர் ஏ.லாசர், நாகை மாவட்டம் கரியாப் பட்டினம் மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம், புதுக்கோட்டையில் மாநிலப் பொருளாளர் சங்கர், திருச்சி மாவட்டம் லால்குடியில் மாநில செய லாளர் அ.பழனிசாமி, அருப்புக் கோட்டையில் மத்தியக்குழு உறுப்பினர் எஸ்.பூங்கோதை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புதுதில்லி
ஆகஸ்ட் 9 ஞாயிறன்று புதுதில்லி யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு சார்பில் தபன்சென், டாக்டர் கே.எச்.ஹேமலதா, தேவ்ராய், ஏஐடி யுசி அமர்ஜீத் கவுர், வித்யாசாகர் கிரி, எச்எம்எஸ் சார்பில் ஹர்பஜன் சித்து, ஐ என்டியுசி சார்பில் அசோக் சிங், ராஜு, தொமுச சார்பில் ஜவஹர் மற்றும் பல்வேறு மத்தியத் தொழிற்சங்கங் களின் தலைவர்களும், வங்கிகள், ரயில்வே, பெட்ரோலியம், பாதுகாப்பு, மின்சாரம், டெலிகாம், அஞ்சல் மற்றும் இன்சூரன்ஸ் சங்கங்களின் தலை வர்களும் கலந்துகொண்டனர். அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஹன்னன்முல்லா, கிருஷ்ணபிரசாத், விஜூகிருஷ்ணன் முதலானவர்கள் கலந்துகொண்டனர். சமூக முடக்கக்காலத்தில் தில்லி ஜந்தர்மந்தரில் நடைபெற்றுள்ள மாபெரும் கண்டன இயக்கமாக இது பிரதிபலித்தது. தில்லியில் அங்கன்வாடி ஊழியர் களும், ‘ஆஷா’ ஊழியர்களும் பெரும் திரளாக இப்போராட்டத்தில் பங்கேற்று ள்ளனர். இதேபோன்று பஞ்சாப், ஹரி யானா, இமாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, கேரளா, குஜ ராத், உத்தரகண்ட், திரிபுரா, ஜார்க் கண்ட், ஒடிசா, ஆந்திரப்பிரதேசம், ராஜஸ் தான், பீகார், மேற்கு வங்கம், தமிழ் நாடு, அசாம், கர்நாடகம் மற்றும் சில மாநிலங்களிலும் இப்போராட்டம் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றுள் ளது. (ந.நி.)