tamilnadu

img

‘இந்தியாவைப் பாதுகாப்போம்’ - தொழிலாளி வர்க்கம் ஆவேசம்

கோவை, ஆக. 8–  கஞ்சிக்கில்லாதோர் நிலை குறித்து சிந்திக்காத மோடி அரசை இனியும் பொறுப்பதற்கில்லை, ஆட்சியை விட்டு வெளியேறு, ‘இந்தியாவைப் பாதுகாப் போம்’ என்கிற ஆவேச முழக்கத்து டன் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர் சட்டங்களை சீர்கு லைக்கக் கூடாது. வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்கக் கூடாது. மின் சார திருத்தச் சட்டத்தைக் கைவிட வேண்டும். சுற்றுச்சூழலை நாசம் செய் யும் இஐஏ 2020 சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். கொரோனா தாக் கத்தை மையமாக வைத்து நிலக் கரிச் சுரங்கங்கள், விண்வெளி அறிவியல், வங்கி, ரயில்வே போன்ற வற்றை தனியாருக்கு விற்கக் கூடாது. கொரோனா ஊரடங்கால் பாதிக்கப் பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் மார்ச் முதல் ஜூலை வரை மாதத் திற்கு தலா ரூ.7,500 கணக் கீட்டு வழங்கிட வேண்டும் என்பன உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தியும், ‘இந்தியாவைப் பாதுகாப் போம்’ என்கிற முழக்கத்தை முன் வைத்தும் நாடு முழுவதும் கண்டன இயக்கத்தில் ஈடுபட அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத் தது. 

இதன் ஒருபகுதியாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஐஎன்டியுசி பாலசுந்தரம், ஏஐடியுசி எம்.ஆறுமுகம், எச்எம்எஸ் ராஜாமணி, எல்பிஎஃப் ரத் தினவேல், எம்எல்எப் தியாகராஜன், ஏஐ சிசிடியூ லூயிஸ், எஸ்டிடியு ரகுபுரி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். இதேபோல், மேட்டுப்பாளையத் தில் 60 இடங்களிலும், கவுண்டம்பாளை யம் 55, சிங்கை 20, அன்னூர் 30, கோவை வடக்கு 23, கோவை கிழக்கு 16, கோவை மேற்கு 23, கோவை  தெற்கு 21, சூலூர் 35, தொண்டா முத்தூர் 26, கிணத்துக்கடவு 25, பொள் ளாச்சி, ஆனைமலை 20 மையங் களிலும், போக்குவரத்து அனைத்து பணிமனைகள், ஆட்டோ ஸ்டேண்டு கள், சாலை போக்குவரத்து, மின் வாரியம், தொழிற்சாலை வாயில் கள் என 500-க்கும் மேற்பட்ட இடங்களில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார் பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இதில் சிஐடியு மாவட்டத் தலைவர் சி.பத்மநாபன், பொருளாளர் ஆர்.வேலுச்சாமி, மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.  மேலும், இப்போராட்டத்திற்கு ஆத ரவு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பிலும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இதில், கட்சியின் மாவட்ட செயலா ளர் வி.இராமமூர்த்தி மற்றும் இடைக் குழு செயலாளர்கள், செயற்குழு உறுப் பினர்கள் உள்ளிட்டு திரளானோர் பங்கேற்றனர்.

தருமபுரி

தருமபுரி தொலைபேசி நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாநிலச் செயலாளர் சி.நாக ராசன் தலைமை வகித்தார். எல்பிஎப் மாவட்டத் தலைவர் அன்புமணி, மாவட் டச் செயலாளர் சண்முகராஜா, ஐஎன்டி யுசி மாவட்டத் தலைவர் ராஜேந்திரன், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் பி.மணி, நிர்வாகிகள் முனியப்பன், ஆறுமுகம், ஏஐசிசிடியு மாவட்டச் செய லாளர் முருகன், நிர்வாகிகள் சுதர்சனம், கந்தசாமி, ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.  மேலும், அரூரில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு எல்பிஎப் தலைவர் ஜே.பழனி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் சி.ரகுபதி, ஏஐடியுசி மாவட்ட நிர்வாகி ஆர்.நட ராஜன் ஆகியோர் பேசினர்.  இதே போல், நல்லம்பள்ளி, காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம், பாலக்கோடு உள்ளிட்ட மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் அனைத்து தொழிற்சங்கம் மற்றும் அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப் பாட்டங்கள் நடைபெற்றன.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, சத்தி யமங்கலம், கோபி, அந்தியூர், பவானி, கொடுமுடி, நம்பியூர், பெருந்துறை மற் றும் சென்னிமலை ஆகிய பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டங்களில் ஆயிரத்திற் கும் மேற்பட்டோர் பங்கேற்று, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.

திருப்பூர்

திருப்பூரில், மாநகராட்சி அலுவல கம், குமரன் சிலை, எஸ்ஏபி தியேட்டர் அருகில், அனுப்பர்பாளையம், வேலம் பாளையம், கொங்கு மெயின் ரோடு, வீர பாண்டிப் பிரிவு உள்பட நகரில் 25 இடங்களிலும், ஊத்துக்குளி, உடு மலை, அவிநாசி, பல்லடம் உள்பட மாவட்டத்தின் இதர பகுதிகளில் 15 இடங்களிலும் என மொத்தம் 40 இடங் களில் தொழிற்சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் எழுச்சியு டன் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட் டங்களில் சிஐடியு மாவட்ட நிர்வாகி கள் கே.உண்ணிகிருஷ்ணன், கே.ரங்க ராஜ், டி.குமார், எல்பிஎப் மாநிலத் துணைச் செயலாளர் டி.கே.டி. மு.நாகராஜ், சிதம்பரம்சாமி, ஏஐடியுசி நிர்வாகிகள் ஜி.காளியப்பன், எம்.ரவி, என்.சேகர், ஐஎன்டியுசி சிவசாமி, பெருமாள், எச்எம்எஸ் முத்துசாமி, குணசேகர், எம்.எல்.எப் சு.சிவபாலன், சம்பத் உள்ளிட்ட சிஐடியு, ஏஐடியுசி, எல்பிஎப், எம்எல்எப், எச்எம்எஸ், ஐஎன்டியுசி சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

சேலம்

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு எல்பிஎப் நிர்வாகி பழனியப் பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சிபிஎம் மாவட் டச் செயலாளர் பி.ராமமூர்த்தி கோரிக் கைகளை விளக்கிப் பேசினார். இதேபோல், அஸ்தம்பட்டி அரசுப் போக்குவரத்து பணிமனை முன்பு சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.உதயகுமார் தலைமையிலும், அரசு விரைவுப் போக்குவரத்து பணிமனை முன்பு சிஐடியு மாநிலக் குழு உறுப்பி னர் ஆர்.வெங்கடபதி தலைமையிலும், தலைமைத் தபால் நிலையம் முன் மாவட்ட துணைத்தலைவர் எஸ்.கே.தியாகராஜன் தலைமையிலும், சேலம் உருக்காலையில் சிஐடியு மாவட் டத் தலைவர் பி.பன்னீர்செல்வம் தலை மையிலும், மேட்டூரில் மாவட்டப் பொரு ளாளர் வி.இளங்கோ, சி.கருப்பண் ணன் ஆகியோர் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும், நங்கவள்ளி, வாழப்பாடி உள் ளிட்ட சேலத்தில் 50-க்கும் மேற்பட்ட  இடங்களில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில், அனைத்து தொழிற் சங்கங்களைச் சேர்ந்த திரளா னோர் கலந்து கொண்டனர்.