பெரம்பலூர், ஜூன் 18- பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா பரவாய் கிராமத்தில் ஊருக்கு தெற்கே 15 ஏக்கர் பரப்பளவில் மார்க் காய் ஏரி உள்ளது. இந்த ஏரி கடந்த 1975-ஆம் ஆண்டிற்கு பிறகு முறை யாக தூர்வாரப்படவில்லை எனக் கூறி ஏரியை தூர்வார வேண்டுமென வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளி டம் பொது மக்கள் பலமுறை மனு கொடுத்தும் ஏரியை தூர்வார நட வடிக்கை எடுக்கவில்லை. மாவட்ட ஆட்சியரும் கண்டுகொள்ளவில்லை. எனவே அப்பகுதி பொது மக்களே ஒன்று சேர்ந்து வீட்டுக்கு வீடு பணம் வசூல் செய்து தூர்வார முடிவெடுத்து பர வாய் கிராமத்திலுள்ள ஊர் பிரமுகர் கள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட பொது மக்கள் வீட்டிக்கு ஒருவர் என கடந்த 15 நாட்களாக ஏரியை சுத்தப்படுத் தும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறு கையில், பரவாய் கிராமத்தில் பல நூறு ஆண்டுக்கு முன் வாழ்ந்த மாக்காயி என்ற மூதாட்டி குழந்தை பேறு இல்லாத தால் பரவாய் கிராமத்தின் வறட்சியை போக்கிட அவருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் ஏரி அமைத்து ஊருக்கு தான மாக வழங்கியதாகவும், அப்போது முதல் கடந்த சில ஆண்டு வரை பரவாய் கிராமத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்ட தில்லை என்றும் கூறினர். தற்போது பருவ மழை பொய்த்து போனதாலும், ஏரியை முறையாக பரா மரிக்காததாலும் ஏரி முழுவதும் முட்புதர் மண்டி தண்ணீர் தேங்கிட வழியில்லா மல் தற்போது கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளதாக வேதனையடைந்த மக்கள் ஏரியை தூர்வாரும் பணியை நிறைவு செய்துள்ளனர். பொது மக்களின் முயற்சியால் தூர்வாரப்பட்டுள்ள மார்க்காய் ஏரி போதிய பருவமழை பெய்தால் நிறைந்து ததும்பும் என்ற நம்பிக்கையில் உள்ளனர் பரவாய் கிராம மக்கள். (ந.நி.)