tamilnadu

img

சென்னைக்கு வந்தது நடராஜர் சிலை

சென்னை, செப்.13- ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்கப்பட்ட ரூ. 30 கோடி மதிப்பிலான நடராஜர் சிலை  சென்னைக்கு வந்தடைந்தது.  நெல்லை மாவட்டம் அம்பாசமுத்தி ரத்தை அடுத்த கல்லிடை குறிச்சி குலசேகர முடையார் உடனுறை அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவிலில் உற்சவ மூர்த்தி யாக விளங்கி வந்த நடராஜர் சிலையை சுமார் 37 ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளை யர்கள் திருடிச்சென்றனர். இந்நிலையில், உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரி பொன்மாணிக்கவேல் தலைமை யில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், இந்த சிலை திருட்டு வழக்கை  விசாரணை செய்தனர். இதனிடையே, திருடுபோன அச்சிலை ஆஸ்திரேலியா நாட்டில் ஒரு ஆர்ட் கேலரி ஆப் சவுத் ஆஸ்தி ரேலியா எனும் அருங்காட்சியகத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சிலையை ஒப்படைக்க அருங்காட்சி யக நிர்வாகம் ஒப்புக் கொண்டதையடுத்து, சிலை தில்லிக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் தில்லியிலிருந்து சிலை சென்னைக்கு எடுத்து வந்தனர். சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் கும்ப கோணம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால், நடராஜர் சிலை அங்கு  எடுத்துச் செல்லப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. ஆஸ்திரேலியாவிலிருந்து நடராஜர் சிலையை மீட்க உதவி செய்த அனைத்து  தரப்பினருக்கும் பொன் மணிக்கவேல் நன்றி தெரிவித்தார். எந்த சிலையும் காட்சி  பொருள் அல்ல என்ற அவர், இன்னும் பல்வேறு சிலைகள் மீட்கப்பட வேண்டி யுள்ளதாகவும் அனுமதி அளித்தால் எல்லா சிலைகளும் மீட்கப்படும் என்றும் கூறினார்.