tamilnadu

img

நாங்குநேரி, விக்கிரவாண்டியில் இன்று வாக்கு எண்ணிக்கை

சென்னை,அக்.23- நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (வியாழன்) எண்ணப்படுகின்றன.  நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு அக்டோபர் 21 அன்று நடைபெற்றது. நாங்குநேரி தொகுதியில் ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 674 பேர் வாக்களித்தனர். இது மொத்த வாக்குகளில் 66.35 சதவீதம். வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு இயந்திரங்கள் நெல்லை அரசு பொறியியல்  கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் 1 லட்சத்து 88 ஆயிரத்து 659 வாக்குகள் பதிவா கின. இது 84.41 சதவீதம்.வாக்குப்பதிவு இயந்திரங்கள்  விழுப்புரம் முத்தாம்பாளையத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. அக்டோபர் 23 வியாழனன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. இதற்காக அங்கு 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன. மொத்தம் 22 சுற்றுகள்  எண்ணப்படுகின்றன. சி.சி.டி.வி கேமிரா பொருத்தப்பட்டு வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரமும் தேர்தல் ஆணைய இணை யத்தில் நேரடியாக அறிவிக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.  வாக்கு எண்ணும் மையத்தில் ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் ஒரு ஏஜெண்டு மட்டும் அனு மதிக்கப்படுவார்கள். மற்றவர்களுக்கு அனுமதி இல்லை.  வாக்கு எண்ணிக்கை முடிவுகள் 11 மணி முதல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.