சென்னை,அக்.2- நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சேலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்த இர்பானின் தந்தை முகமது ஷபி போலி மருத்துவர் என்பது சிபிசிஐடி விசாரணையில் தெரிய வந்துள்ளது. நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீ ஸாரால் தேடப்பட்டு வந்த தரும புரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் முகமது இர்பான் சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குற்றவியல் நீதித் துறை நடுவர் எண் 2-இல் நீதிபதி சிவா முன்னிலையில் செவ்வாய்க் கிழமை சரணடைந்தார்.வழக்கை விசாரித்த நீதிபதி சிவா, வரும் அக். 9-ஆம் தேதி வரை முகமது இர்பானை சேலம் மத்திய சிறை யில் அடைக்க உத்தரவிட்டார். அவரது தந்தை மருத்து வர்கள் என்று கூறப்பட்ட முகமது ஷபி, முன்பே கைது செய்யப் பட்ட நிலையில், அவர் மருத்து வரே அல்ல என்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முகமது ஷபி மருத்துவர் அல்ல என்றும், அவர் மருத்து வப் படிப்பை பாதியில் விட்டவர் என்பதும், வேலூர் மற்றும் வாணி யம்பாடியில் இரண்டு கிளினிக்கு களை நடத்தி வந்ததும் சிபிசிஐடி விசாரணையில் கிடைத்திருக்கும் அதிர்ச்சிகர தகவல்களாகும்.இதையடுத்து, போலி மருத்துவர் என்ற வகையில் கைது செய் யப்பட்ட முகமது ஷபியை அக் டோபர் 16ம் தேதி வரை சிறை யில் அடைக்க தேனி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒரே ஒரு நீட் தேர்வு ஆள் மாறாட்டம் குறித்து அடையா ளம் தெரியாத நபர் அனுப்பிய மின்னஞ்சல் மூலம் வெளிச் சத்துக்கு வந்த விவகாரத்தில், மேலும் பல மாணவர்கள் கைதா னது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.ஆனால், கிணறு தோண்ட பூதம் கிளம்பியது போல, பூதத்தைப் பிடிக்கப் போனால், அங்கு மேலும் சில பூதங்கள் சிக்கியது போல் இருக்கிறது போலி மருத்து வர் விஷயம். நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு படிப்பில் சேர்ந்ததாக எழுந்த புகாரின்பேரில், மாணவர் உதித் சூர்யா, அவரது தந்தை மருத்து வர் வெங்கடேசன் ஆகியோரை செப். 26-இல் தேனி சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.இதன் தொடர்ச்சியாக, மாணவர் பிரவீன், அவரது தந்தை சரவ ணன், மாணவர் ராகுல், அவரது தந்தை டேவிஸ், விழுப்புரம் மாணவி அபிராமி ஆகிய 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.