திருப்பூர், மே 28 - தமிழகத்தின் தொன்மையான நாகரிகத்தை வெளிக்காட்டிய கீழடிக்கு நிகரான, 2300 ஆண்டுகளுக்கு முந்தைய நாகரிகத்தைக் கொண்ட கொடு மணல் அகழாய்வுப் பணி தொடங்கப் பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட எல்லையில் நொய்யல் ஆற்றின் வடகரையில், ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஒன்றி யத்தில் கொடுமணல் கிராமம் அமைந் துள்ளது. இங்கு கடந்த 1961 ஆம் ஆண்டு முதன்முதலில் தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து 1980 களில் தொடங்கி 2018 ஆம் ஆண்டு வரை பல முறை அகழாய்வு செய்யப்பட்டு ள்ளது. மத்திய, மாநில அரசுகளின் தொல்லியல் துறை மற்றும் புதுச்சேரி பல்கலைக்கழகத்தினர் இங்கு தொடர்ந்து அகழாய்வுகள் செய்து வந்துள்ளனர்.
இதில் 2300 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு மனித நாகரிகம் இருந்ததற்கான ஏராளமான சான்றுகள் ஏற்கெனவே கிடைத்துள்ளன. இந்நிலையில் மேலும் விரிவான ஆய்வுகள் செய்வதற்காக தமிழக அரசின் தொல்லியல் துறை ரூ.31 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது. கொரோனா நோய்த் தொற்றுப் பரவலுக்கு முன்பே இப்பணி தொடங்குவதாக இருந்தது. எனினும் ஊரடங்கு காரணமாக இப்பணித் தொடங்குவது தாமத மாகி மே 27ஆம் தேதி அகழாய்வுக் குழுவினர் பணியைத் தொடங்கி யுள்ளனர். அகழாய்வுப் பணி இயக்குநர் ஜெ.ரஞ்சித் தலைமையிலான குழுவினர் இப்பணியை மேற்கொண்டுள்ளனர். நான்கு மேற்பார்வையாளர்கள், 15 பணியாளர்கள் தற்போது மேற்பரப்பை சுத்தம் செய்து அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.
இம்முறை கொடுமணலில் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் அக ழாய்வு செய்யப்படும். ஏற்கெனவே இங்கு கி.மு. 3ஆம் நூற்றாண்டு காலத்தைக் குறிக்கும் வளமான பல சான்றுகள் கிடைத்துள்ளன. இம்முறை அகழாய்வில் மனிதர்கள் வாழ்ந்த குடியிருப்புகள், புதைக்கப்பட்ட மை தானங்கள் உள்ளிட்டவை விரிவாக ஆய்வு செய்யப்படும். இதில் கிடை க்கும் விபரங்கள், சேகரிக்கப்படும் பொருட்கள் கார்பன் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு இதன் காலம் நிர்ணயிக்கப்படும் என்று தொல்லியல் துறையினர் தெரிவித்தனர். கொடுமணலைச் சேர்ந்த முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் ஜெ.ராமச் சந்திரன் அகழாய்வுக் குழுவினருக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகிறார்.