tamilnadu

img

நெல்லையில் பயங்கரம் முன்னாள் மேயர் உட்பட 3 பேர் வெட்டி கொலை

திருநெல்வேலி, ஜூலை 23 - நெல்லை  மாநகராட்சியில் மேயராக இருந்தவர் உமா மகேஸ்வரி. திமுகவை சேர்ந்த இவர் நெல்லை அருகேயுள்ள ரெட்டியார் பட்டியில் வசித்து வந்தார். இந்நிலையில் செவ்வாய்கிழமை  மாலை 6 மணியளவில் அவர், தனது கணவருடன் வீட்டில் இருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த ஒரு மர்ம கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அவர்களை சரமாரியாக  வெட்டினர். இதை தடுக்க வந்த பணிப்பெண்ணுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதையடுத்து கொலைக்கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். படுகொலை செய்யப்பட்ட முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி நெல்லை மாநகராட்சி உதயமான போது முதல் மேயராக இருந்தவர்.