tamilnadu

img

ரூ.4200 கோடி ஊழல் மீது நடவடிக்கை எடு!

250 நாள்கள் வேலை கொடு!

நூறுநாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள்  மாநிலம்  முழுவதும் ஆவேச போராட்டம்

சென்னை, மார்ச் 10- நூறுநாள் வேலைத்திட்டத்தில்  250 நாள்கள் வேலை வழங்கி, தினக்கூலியை 600 ரூபாயாக உயர்த்த வேண்டும். இத்திட்டத்தில் நிகழ்ந்துள்ள ரூ.4200 கோடி ஊழல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று வலியுறுத்தி அகில இந்திய விவ சாயத்தொழிலாளர் சங்கத்தின் தலைமை யில்  நூறுநாள் வேலைத்திட்ட தொழி லாளர்கள் செவ்வாயன்று மாவட்ட ஆட்சியர்  அலுவலகங்களில் தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதில் ஆயிரக்கணக்கில் திரண்டு ஆவேச முழக்கமிட்டனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் தொடர்ச்சியாக வேலை, முழுமையான கூலி, தாமதமில்லாமல் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளி ட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தியும்  தமிழகம் முழுவதும்  நடைபெற்றப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயத் தொழிலாளர்களும், திட்டப் பயனாளிகளும் தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மனுக்களுடன் திரண்டனர். 

கிராமப்புற வறுமை ஒழிப்புத் திட்டமாக 2005ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வரும் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம், குடும்பத்திற்கு ஆண்டுக்கு 100 நாள் வேலையை சட்டப்படி உத்தரவாதப்படுத்துகிறது. மோடி அரசு அமைந்த காலம் முதல் தொடர்ச்சியாக இச்சட்டத்தை சிதைத்தும், நோக்கத்தை  கொச்சைப்படுத்தியும் வருகிறது. ஆண்டுக்காண்டு வேலை கோருபவர்கள் எண்ணிக்கையும், தினக்கூலி ரூ.80லிருந்து 229 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டு ஒதுக்கீடு செய்யப்படும் நிதி ஏறக்குறைய சமநிலையிலேயே உள்ளது. ஊதியமும் - பயனாளிகளின் உயர்விற்கு ஏற்ப குறைந்தபட்சம் 2 லட்சம் கோடி ஒதுக்கப்பட வேண்டியதில் 25 சதவீத அளவிற்கே நிதி ஒதுக்கப்படுகிறது. பிரதமர் துவங்கி பாஜக அமைச்சர்கள் வரை இத்திட்டத்தை சிதைப்பதிலேயே குறியாக உள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் திட்டத்தின் அமலாக்கம் ஏனோதானவென்றும், எதேச்சதிகார நோக்கத்துடனும் செயல்படுத்தப்படுகிறது. 50 நாட்களைத் தாண்டி கிராமப்புற குடும்பங்களுக்கு வேலை எந்த மாவட்டத்திலும் வழங்கப்படவில்லை. கூலியையும் முழுமையாக வழங்காமல் குறைத்து வழங்கும் நிலை உள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக இத்திட்டம் ஆளுங்கட்சிக்காரர்களின் வேட்டைக்காடாக மாற்றப்பட்டுள்ளது. 2017-18ஆம் ஆண்டுகளில், 1,11,628 பணிகளில் 223 கோடி யும், 2018-19ஆம் ஆண்டுகளில் 1,68,698 பணிகளில் 1600 கோடியும் ஊழல் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதை தமிழ்நாட்டில் சமூகத் தணிக்கைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ள மிகப்பெரிய நிதி மோசடியாகும். சட்டத்தின்படி இந்த முறைகேடுகள் மீது கிரிமினல் வழக்குகள் பதியப்பட வேண்டும். ஆனால் மாநிலம் முழுவதும் ஒரு எப்ஐஆர் கூட பதிவு செய்யப்படவில்லை என்பது தவறு செய்தவர்களை அப்பட்டமாக பாதுகாக்கும் நடவடிக்கையாகும்.

தொடர் முழக்கப் போராட்டம்

விவசாயக் கூலித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல் படுத்தப்பட்ட 100 நாள் வேலைத்திட்டத்தில் தொடர்ச்சியாக முழுமையாக வேலை வழங்க வேண்டும். தினக்கூலியை தற்போது அமலிலும் உள்ள ரூ.229 ஐ குறைக்காமல் வழங்க வேண்டும். மாதக் கணக்கில் இருக்கும் சம்பளப் பாக்கிகளை உடன் வழங்க வேண்டும். இன்றைய விலைவாசி மற்றும் வேலை நிலைமையைக் கணக்கில் கொண்டு 250 நாட்களாக வேலை நாட்களை உயர்த்த வேண்டும். தினக்கூலியை ரூ.600 ஆக அதிகரிக்க  வேண்டும். வேலை செய்த தொழிலாளர்களுக்கு 15 தினங்களுக்குள் ஊதியம் வழங்க வேண்டும். செவ்வாய்க்கிழமை தோறும் வேலைக்கான மனுக்களை ஊராட்சி அலுவலகத்தில் பெற்று பதிந்து வேலை வழங்கிட வேண்டும். தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் திட்டத்தில் நடைபெற்றுள்ள ஊழல் - முறைகேடுகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மக்கள் மனுக்களுடன் திரண்டு ஆவேச முழக்கமிட்டனர்.

நாகை மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் நடைபெற்ற தொடர் முழக்கப் போராட்டத்தில் மாநிலத் தலைவர் ஏ.லாசர், மாநிலத் துணைத் தலைவர் ஜி.ஸ்டாலின், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றப் போராட்டத்தில் மாநிலப் பொதுச் செய லாளர் வீ.அமிர்தலிங்கம், மாநில செய லாளர் அ.பழநிசாமி, திருவாரூர் மாவட்ட ஆட்சியரகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் மாநிலப் பொருளாளர் எஸ்.சங்கர், மாநில துணைத் தலைவர் எம்.கலைமணி, கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற போராட்டத்தில் மாநிலச் செயலாளர் எம்.சின்னத்துரை, சேலத்தில் நடைபெற்ற போராட்டத்தில் மாநிலச் செயலாளர்கள் எஸ்.பூங்கோதை, ஜி.கணபதி, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் மத்தியக்குழு உறுப்பினர் ஜி.மணி, மாநில துணைத் தலைவர் அ.து.கோதண்டம், நாமக்கல்லில் சி.துரைசாமி, தர்மபுரியில் எம்.முத்து, மதுரையில் பி.வசந்தாமணி, திருவண்ணா மலையில் பி.சுப்பிரமணி உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

போராட்டத்தை சிதைப்பதற்கும் மக்க ளைப் பங்கேற்காமல் தடுப்பதற்கும் மாநிலம் முழுவதும் ஆளுங்கட்சி பிரமுகர்களும் அதி காரிகளும் பல முயற்சிகளை மேற்கொண்ட னர். போராட்ட அறிவிப்பு துண்டு பிரசுரம் வெளிவந்த பிறகு ஆங்காங்கே வேலை களை துவக்கி கொடுத்தனர். இருப்பினும் முப்பது மாவட்டங்களில் ஆயிரக் கணக்கானோர் போராட்டத்தில் திரண்டனர். ஆயிரக்கணக்கான மனுக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் அளித்தனர்.

போராட்டங்களோடு முடித்துவிடாமல், வரும் ஏப்ரல் முதல் தொடர்ச்சியாக வேலை, தாமதமில்லாமல் சம்பளம் வழங்கிட வேண்டுமென மாவட்ட ஆட்சியர்களிடம் தலைவர்கள் வலியுறுத்தினர்.