சென்னை, மார்ச் 28- ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாத ரத்தை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும் என்று ஆட்டோ தொழிலாளர் சம்மேளம் (சிஐடியு) வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலை வர் வி.குமார் பொதுச்செயலாளர் சிவாஜி ஆகி யோர் எடுத்திருக்கும் அறிக்கை வருமாறு:- உலகை உலுக்கும் கொரோனாவில் இருந்து விடுபட அரசு எடுக்கும் நடவடிக்கை களுக்கு ஒத்துழைக்க வேண்டிய சமூக பொறுப்பு ஆட்டோ தொழிலாளர்களுக்கும் இருக்கிறது என்பதை அரசின் கவனத் திற்குக் கொண்டு வருகிறோம். அதே நேரத்தில் ஆட்டோ தொழிலாளர்கள் சேர்த்து வைத்துக்கொண்டு வாழ்க்கை நடத்து பவார்கள் இல்லை. அன்றாடம் உழைத்து தான் ஆட்டோவிற் குறிய தவணை, வாரச் சீட்டுக்கு வாங்கிய தவணை செலுத்துவ தோடு, தங்கள் குடும்ப செலவுகளையும் செய்து வருகிறார்கள்.
தமிழகத்தில் சுமார் 2,85,000 ஆட்டோ அனுமதி வழங்கப் பட்டுள்ளது. ஆட்டோ ஓட்டு நர்கள், டிங்கர், லயனர், பெயிண்டர், டாப் அடிப்பவர். பழுது நீக்குவோர் என பல லட்சம் பேர் ஈடுபடக்கூடிய தொழிலாக இத்தொழில் விளங்குகிறது. யாருடைய வருமானத்தையும் எதிர் பார்க்காத, தினமும் உழைத்து வாழ்க்கை நடத்திவரும் அமைப்புசார தொழிலாளர் களாவர். 21 நாள் ஊரடங்கு என்பதை அரசு உதவி செய்தால் மட்டுமே சமாளிக்க முடியும். மார்ச் 31 வரை தமிழக அரசு 144 தடை உத்தரவு அறிவித்திருந்த போது, ரூபாய் 5ஆயிரம் உதவி நிதி வழங்க வேண்டும் என ஆட்டோ சம்மேளனம் கோரிக்கை வைத்தது.
சட்டமன்றத்தில் ரூ.1000 நலவாரியத்தில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் என அறிவிப்பு செய்தீர்கள். நலவாரியத்தில் பெரும்பாலான ஆட்டோ தொழிலாளர்கள் உறுப்பினர்களாக இல்லை. பதிவுக்கு செல்லும்போது பேட்ஜ் இல்லாதவர்களை சேர்க்காததும் ஒரு காரணமாகும். தாங்கள் அறிவித்த ரூ.1000 என்பது போதுமானதல்ல. நலவாரிய உறுப்பினர்களுக்கு மட்டும் தான் ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்றால் பெரும்பாலான ஆட்டோ தொழிலாளர்க ளுக்கு இந்த ஆயிர ரூபாய் நிவாரணமும் கிடைக்காது என்பதை தங்களின் கவ னத்திற்குக் கொண்டு வந்தோம்.
தற்போது, ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14-ஆம் தேதி வரைக்கும் நீடிக்கப்பட்டுள்ளன. அதனால் நெருக்கடிகளும் அதிகரித்துள்ளன. எனவே தாங்கள் தலையிட்டு ஆட்டோ தொழி லாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டுகிறோம். அதன்படி, அரசு அறிவித்துள்ள நிவார ணத்தை ரூ. 10,000 உயர்த்தி வழங்க வேண்டும். வழங்கும் நிதியை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம் பெற்ற அனைத்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் வழங்கவேண்டும்.
தனியார் நிதி நிறுவானங் களில் வாங்கிய கடன் தொகை செலுத்தும் காலத்தை மூன்று மாதங்கள் நீடிக்க நடவடிக்கை வேண்டும். மூன்று மாதங்களுக்கு வட்டியை உயர்த்தும் நடவடிக்கைகள் கைவிடப்பட வேண்டும். இக்காலத்தில் முடிவடையும் எப்சி, இன்சூ ரன்ஸ், பர்மிட்கள் புதுப்பிக்க 3 மாதங்கள் கால நீடிப்பு செய்யவேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றி ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதா ரத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.