tamilnadu

img

மழை-வெள்ள மீட்புப் பணிக்கு தயார்: அமைச்சர் பேட்டி

சென்னை,அக்.23- சென்னையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதய குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்,“ பருவ மழையினால் உடனடியாக பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய 4,399 பகுதிகள் கண்டறியப்பட்டு, பல்வேறு  துறைகளை உள்ளடக்கிய 639 மண்டல குழுக்கள்  அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 9,162 பெண்கள் அடங்கிய 21,597 முதல் நிலை மீட்பாளர்களும், கால்நடைகளை பாதுகாக்க 8,871 மீட்பாளர்களும், சாலைகளில் விழும் மரங்களை வெட்டி அகற்று வதற்கு 9,909 மீட்பாளர்கள் தயார் நிலையில் உள்ள னர்” என்றார். தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்களை பாதுகாக்கும் பொருட்டு 121 பல்நோக்கு பாதுகாப்பு  மையங்களைத் தவிர, 4,768 பள்ளிகள், 105 கல்லூரி கள், 2,394 திருமண மண்டபங்கள் மற்றும் சமுதாயக்  கூடங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மாவட்டங்களில் மரம் அறுக்கும் எந்திரங்கள், ஜே.சி.பி. எந்திரங்கள், ஜெனரேட்டர்கள், ராட்சத பம்புகள், தேடல் மற்றும் மீட்பு உபகரணங்கள் தயார்  நிலையில் உள்ளன. மேலும் தமிழ்நாடு மின் உற்பத்தி  மற்றும் பகிர்மான நிறுவனத்தால் 1 லட்சம் மின் கம்பங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார். 1,000 காவலர்களைக் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்புப்படை தவிர, தேசிய பேரிடர் மீட்புப்  படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினரி டம் பயிற்சி பெற்ற 6,606 காவலர்கள் அனைத்து  மாவட்டங்களிலும் தயார் நிலையில் நிறுத்தப்  பட்டுள்ளனர். மாநில, மாவட்ட அவசர கால கட்டுப்பாட்டு மையம், சமூக வலைதளம், மின்னணு  மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்கு பேரிடர் குறித்த தகவல்கள் தெரிவிக்க நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரேசன் கடை களுக்கு 2 மாதங்களுக்கு தேவையான பொருட்கள்  இருப்பு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும்  அமைச்சர் உதயகுமார் கூறினார். பேட்டியின் போது முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், பேரிடர் மேலாண்மை இயக்கு நர் ஜெகநாதன், இணை இயக்குனர் பழனி குமார், மக்கள் தொடர்பு செய்தித் துறை இணை  இயக்குநர் பழனியப்பன் ஆகியோர் உடனிருந்த னர்.